Wednesday, August 30, 2006

பெரியார் சிலை "அவமரியாதை"

பெரியார் சிலைக்கு சந்தனம் பூசி "அவமரியாதை" செய்த நபர்களை பிடித்து சட்டதின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தரப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். சட்டரீதியாக எப்படி வழக்கு நடைபெறும் என்று தெரியவில்லை . மாலை போட்டு சந்தனம் பூசி சூடம் ஏற்றி ஊதுவத்தி கொளுத்தி வழிபடுவது எப்படி desceration ஆகும்? கோர்ட் தான் சொல்லவேண்டும்

Wednesday, August 23, 2006

கொஞ்சம் சீரியஸ் மேட்டர்

பழங்காலத்தில் நிலதீர்வை பேரரசுகளயும் சாம்ராஜ்யங்களையும் நடத்த பொருள் தந்தது . இப்போது கிஸ்தி கட்டுவது அவ்வளவாக இல்லை , நிலத்தீர்வயும் அதிகம் இல்லை, இதற்கும் விவசாயிகள் தற்கொலைக்கும் சம்பந்தம் உண்டா ? என் மனதில் தொன்றிய எண்ணம், இந்த பதிவில்.

விவசாயிகள் தற்கொலை கடந்த சில ஆண்டுகளாக பரவலாக நடைபெற்று வருகிற ஒரு சமாச்சாரம் , இதற்கு மூல கரணம் ஆக சொல்லப்படுவது , விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைகவில்லை என்பதே, சந்தையில் விலை அப்போதய நிலவரதின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது , விலை நிர்ணயம் ஒளிவு மறைவு இல்லாமல் நேர்மயாக செய்யப்படுகிறதா என்பது வேறு விஷயம். சந்தை விலை பல சமயங்களில் அரசு சொல்லுல் குறைந்தபட்ச கொள்முதல் விலையை விட வெகு குறைவாகவே பெரும்பாலும் உள்ளது. அரசு தான் நிர்ணயித்த விலையை அமுல் செய்ய முடிவதில்லை அல்லது முயற்சிக்கவில்லை. அரசின் பாராமுகம் ஏன்?

இதற்கும் கிஸ்தி மேட்டருக்கும் என்ன சம்பந்தம் ?

ஒருவர் நமக்கு அனுசரணையாக இருக்க வேன்டுமென்றால் அவருக்கு 1) பிற்பாடு நமது தயவு தேவைப்பட வேண்டும் அல்லது 2) அவருக்கு நாம் ஏதாவது அளித்திருக்க வேண்டும்.

தற்போது சொற்ப தொகையே கிஸ்தியாக வசூலிக்கப்படுகிறது , அதுவும் பலமுறை வெள்ளம் வறட்சி என்று ஏதாவது சாக்கு சொல்லி வசூலிப்பதில்லை. கசப்பான உண்மை என்னவெனில் , எப்பேர்பட்ட ஜன நாயக அரசாக இருந்தாலும் , வரிகட்டாத நபர்களை இரண்டாம் தரக்குடிமக்களாகத்தான் நடத்தும். விவசாயிகள் கேட்கலாம், " நாங்கள் தானே களஞியத்தை ரொப்புகிறோம் !" என்று. உலகமயமாக்கலுக்குப் பிறகு அரசிற்கு தானியம் எங்கும் கிடைக்கும் . சமீபத்தில் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து கோதுமை இறக்குமதி செய்தது நினைவிருக்கலாம்

ஆண்டுதோரும் பட்ஜட் போடும் சமயம் பெரும்தொழிலதிபர்களையும், பெரும் வணிகர்களையும் கூப்பிட்டு ஆலோசனை செய்யும் அரசு இதுவரை விவசாய ப்ரதிநிதிகளை கூப்பிட்டு ஆலோசனை செய்ததாக எனக்கு தெரியவில்லை.


இதற்கு காரணம் நம் விவசாயப்பெருமக்கள் அரசை சதாசர்வகாலமும் அண்டி நிற்பது தான். தலைவர்களும் கடன் தள்ளுபடி, மானியம். இலவச மின்சாரம், என்று கவர்ச்சியாக பேசிப்பேசி விவசாயியின் முதுகெலும்பை உடைக்கிறார்கள். மூவேந்தர் காலம் முதல் வெள்ளைக்காரன் காலம் வரை அரசுக்கு இறையளித்த விவசாயி இன்று திருவோடேந்தி நிற்கிறான்.


இந்த நிலை மாற முதலில் குறைந்தபட்சம் பெரிய விவசாயிகளாவது வருமானவரி அல்லத் சற்றூ பெரிய அளவில் கிஸ்தி கட்டவேண்டும், நாட்டில் 10 லட்சம் பெருவிவசாயிகளாவது நிச்சயம் இருப்பார்கள். ஆளுக்கு ரூ 10000 கட்டினாலும் 1000 கோடி வருகிறது. எந்த அரசும் இந்தப்பணத்டை வேண்டாம் என்று சொல்லாது.

பதிவு தொடரும்

Friday, August 18, 2006

அல்லக்கைகளிடமிருந்து தமிழ் மண் காக்க ஒரு யோசனை.

நெடு நாளைக்கு பிறகு அரசியல்.
கருணாநிதியும் அல்லக்கைகளும் தரிசு நிலம் பற்றி வாய்க்கு வ ந்தபடி அடித்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கிராமங்களில் விஏஓ மற்றும் அல்லக்கை அரசு ஊழியர்கள் சிறு நில உரிமையாளர்களிடம் கட்டிங் வாங்கி நிலங்களை தரிசு இல்லை என்று எழுதி தருகிறார்கள்.
ஒரு யோசனை, நிலத்தை 1000,2000 ரூபாய்க்கு வங்கியில் அடைமானம் வைத்தால் பரோட்டாவால் கையக படுத்த முடியாது. புரட்சி தலைவி மீண்டும் வந்தவுடன் மீட்டுக்கொள்ளலாம்.