Thursday, May 24, 2007

விஜயகாந்தின் காமெடி

'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று இன்னும் முடிவு செய்யவில்லை' என்று விஜயகந்த் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் அவரிடம் இருப்பது ஒரே ஒரு ஓட்டு அதனை யாருக்கு போட்டால் என்ன , இல்லை போடாவிட்டால் தான் என்ன! ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படுபவர்கள் வரிசையில் நின்று இவர்டம் ஆதரவு கேட்பது போலவும் , இவர் யோசித்து சொல்கிறேன் என்பது போலவும் பில்டப் கொடுப்பது , டூ மச்.


சினிமாவில் தனியொரு ஆளாக காஷ்மீர் வரை சென்று, பஞ்ச் டயலாக் பேசியபடியே பயங்கரவாதிகளை பந்தாடுவது மாதிரி ஜனாதிபதி தேர்தலையும் நினைத்துவிட்டார் போல.

ஒரு கதை நியாபகம் வருகிறது. மதுரை திருமலை நாயக்கர் மஹால் வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் பேசிக்கொண்டார்களாம்..

பிச்சை 1 : இந்த வருஷம் எப்படியாவது திருமலை நாயக்கர் மஹாலை வாங்கிடுவேன்.

பிச்சை 2 : உன்னால் முடியாது, நான் விற்பதாக இல்லை.

"ஜனாதிபதி தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? " என்கிற அபத்த கேள்வியை பேட்டியில் விஜயகாந்திடம் கேட்ட நிருபரை கண்டு காலில் விழுந்து வணங்க வேண்டும்.