Friday, October 03, 2008

வண்டி எண் 103

"வண்டி எண் 103 தாம்பரம் விழுப்புரம் வழியாக புதுச்சேரி செல்லும் துரித பாசஞ்சர் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது நடைமேடைக்கு வந்து செல்லும்" என்று கரகரத்த குரலில் வரும் அறிவிப்பைக்கேட்டு வேகமாக நடைமேடை நான்கை நோக்கிச்சென்றால். அங்கு நிதானமாக வரும் WDM 3d ERODE முன்னால் இழுத்துவர பின்னால் 9 பெட்டிகள் கொண்ட வண்டி தெரியும்.

வண்டியில் ஏறி இடம் பிடித்து உட்காருவது பெரும்பாலும் பிரச்சனை இல்லை, முகூர்த்த நாட்கள் ,மேல்மருவத்தூர் திருவிழா போன்ற சமயங்களில் மட்டும் கூட்டம் கொஞ்சம் இருக்கும்.

மகேந்திரா சிட்டி ஐ.டி மக்கள், மறைமலை நகர் தொழிலாளர்கள், SRM மாணவர்கள், வங்கி ஊழியர்கள், சென்னையில் குடித்தனம் இருந்து வெளியூர் பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்கள் என்று வண்டி முழுவதும் சீசன் டிக்கட் கூட்டம் தான் இருக்கும்.

அவ்வப்போது செவ்வாடை அணிந்த மேல்மருவத்தூர் பக்தர்களும் வருவார்கள்.

காலை 6 30 க்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு 10:50க்கு புதுவை செல்லும். காலை வேளைகளில் கில்லி மாதிரி டைமுக்கு வந்துவிடும் ஆனால் மாலையில் மெகா சொதப்பலாக வரும் அபகீர்த்தி இந்த வண்டிக்கு உண்டு.

வேகமென்றால் வேகம் அப்படி ஒரு வேகம். கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு சுமார் 11 நிமிடத்தில் சென்றுவிடும். குளிர் காலங்களில் மூடுபனியைக் கிழித்துக்கொண்டு செல்லும் அழகை இந்தப்படத்தைப் பார்த்தாலே தெரியும்.




மற்ற வண்டிகளைப்போல அதிகம் வியாபாரிகளைக் காண முடியாது, ஒரே ஒரு சுண்டல்காரர் மட்டும் விடாமல் வருகிறார்.

ரெயில்வே நிர்வாகம் இந்த வண்டியை இயக்கும் விதமே அலாதியனது. இன்னதுதான் என்றில்லாமல் பல வித என்ஞின்களை பொருத்துவார்கள். ஆரம்பத்தில் ஈரோடு WDM3d, பிறகு டிசல் தட்டுப்பாடு ஏற்ப்பட்ட பிறகு WAP-4 Arakkonam எஞ்ஜினும் போட்டார்கள் , பிறகு என்ன ஆனதோ, பலவிதமான எலெக்ட்ரிக் எஞ்ஜின்களை பொருத்துகிறார்கள், WAG7 போன்றவை, ஒரு முறை துக்ளகாபாத் எஞ்ஜினைக்கூட பொருத்தினார்கள். இது போதாதென்று ICFல் ரிப்பேர் செய்யப்படும் ரெயில் பெட்டிகளை இந்த வண்டியில் இணைத்து சோதனை ஓட்டம் விடுவார்கள்.

பல நாட்கள் இந்த ரெயிலில் பயணம் செய்திருக்கிறேன், இப்போது புதிய வேலையில் சேர்ந்திருப்பதால் 103 ல் போகவேண்டிய தேவை இல்லை. I miss it.

Monday, September 01, 2008

மின் காந்த அடுப்பு (Induction Stove)


சமீப காலங்களாக , வட்டார பத்திரிக்கைகள்,மின்சார ரயிலிலும் , மாநகர பேருந்துகளிலும் ஒட்டப்படும் விளாம்பரஙள் ஆகியவற்றில் வியாபித்திருப்பது மின்காந்த அடுப்புதான் (Induction Stove).


AC மின்சாரத்தின் நடுவே காந்த உணர்ச்சிக்கு உள்ளாகும் இரும்பு போன்ற உலோகங்களை வைப்பதால் உருவாகும் எட்டி கரண்ட் மூலம் உணவுப்பண்டங்களை சூடாக்குகிறது.
இந்த அடுப்பில் இரும்பு மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களை (Ferro or ferri magnetic)மட்டுமே வைத்து சமைக்க இயலும்.

குறைந்த அளவு மின்சார செலவில் (ஒரு மணிநேரத்திற்கு முக்கால் யூனிட்) சமையல் செய்யலாம். மின்குக்கர், மைக்ரோவேவ் போன்று மூடிய நிலையில் இல்லாமல் , திறந்த அடுப்பு என்பதால் நம்மூர் சமையலுக்கு மிகவும் ஏற்றது.

1700 முதல் 3500 ரூபாய் வரை பல வித வடிவங்களில் கிடைக்கிறது.
ஆரம்பத்தில் சில கடைகளிலிலும், பொருட்காட்சிகளிலும் மட்டுமே காணப்பட்டாலும் இன்று பெரும்பாலான பாத்திரக்கடைகளில் கிடைக்கிறது.

இவ்வளவு நல்லவிஷயங்கள் இருந்தாலும் இன்னும் விடியோகான், எல் ஜி, போன்ற பெரிய பிராண்டுகள் இதன் உற்பத்தியை துவக்கவில்லை. பெரும்பாலும் உப்புமா பிராண்டுகளே உள்ளன. எப்படி நம்பி வாங்குவது? இந்த அடுப்புக்களை விற்கும் ஒரு பிரதிநிதியை கேட்டபொழுது "மாசத்துக்கு 70 பீஸ் போவுது சார்" என்றார்.

கேஸ் தொல்லை பெரும் தொல்லையாக இருப்பதால் கண்டிப்பாக ஒன்று வாங்கியாக வேண்டும்.

Monday, August 11, 2008

ரஷ்யா ஜார்ஜியா போர்- இந்திய அரசு அதிரடி முடிவு!!

கடந்த சில நாட்களாக ரஷ்யா ஜார்ஜியா நாடுகளுக்கிடையே தென் ஓஷேஷிய பகுதி தொடர்பாக போர் நடப்பது தெரியும்.

நானும் எவ்வளவோ தேடிப்பார்த்துவிட்டேன், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுரவுத்துறை எந்த கருத்தையுமே சொல்லவில்லையே ஏன்?

சில வருடங்களுக்கு முன்பு உலகத்தில் நடக்கும் அத்தனை விவகாரங்களுக்கும் பஞ்ச் டயலாக் சொல்லும் க.கந்தசாமியாக விளங்கிய இந்திய வெளியுரவுத்துறை இப்போதெல்லாம் மவுனம் சாதிக்கிறது, இல்லையென்றால் 'பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும்' என்பது போன்ற வழவழா கருத்தை சொல்லுகிறது.

நம்மால் ஒன்று கையால் ஆகாது பிறகு வாய்ச்சவடால் மட்டும் எதற்கு என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டார்களோ? உண்மை அதுவெனில் மிக்க மகிழ்ச்சி.

'நம்ம வழியை நாம பாத்துப்போம் , நமக்கு என் ஊர் நாட்டமை' என்று நினைத்தால் நாட்டிற்கு நல்லது.

Friday, July 11, 2008

கேரளாவில் தமிழக தொழிலாளர்களுக்கு அடி உதை!

கொல்லம் புனலூர் அகல ரெயில் திட்டப்பணிகளை செய்துகொண்டிருந்த தமிழக மற்றும் ஆந்திர தொழிலாளர்கள் அடித்து உதைக்கப்பட்டனர்.

உள்ளூர் காரர்களை வேலைக்கு அமர்த்தாததால் ஒப்பந்தக்காரர்கள் மீது கோபம் கொண்டு தொழிலாளர்களின் மீது தாக்குதல் நடந்துள்ளது. சில பல தொழிற்சங்கங்களும் இதற்கு உடந்தை.

சில கேள்விகள்
************************
1. இடதுசாரிகள் செய்தால் 'ராஜ் தாக்கரேத்தனம்' சரியா?
2. உலகெல்லாம் உழைத்துப்பிழைக்கும் மலையாளிகள் இவ்வாறு செய்வது என்ன நியாயம்?

Tuesday, July 08, 2008

தேவே கவுடாவும் அணுசக்தி ஒப்பந்தமும்.

சரியாக 10 மாதங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்துக் குடுத்த கடும் கண்டனம்.

Expressing disapproval of the Indo-U.S. nuclear deal, the former Prime Minister H.D. Deve Gowda on Tuesday said that if it is operationalised, India would become “a puppet in the hands of America.”


இன்று அதே தேவகவுடா அடித்த அந்தர் பல்டி.

After SP, JD(S) offers Cong support on N-Deal


எனக்கு ஒரு டவுட்
-----------------------------
இடதுசாரிகளின் ஆதரவு என்னும் சங்கடத்தை எதிர்கொள்ளவே இவ்வளவு பாடுபட்ட காங்கிரஸ், முலயாம், அஜித்சிங்க் , தேவே கவுடா போன்ற ஆசாமிகளை எப்படிச் சமாளிக்கப்போகிறது?


என் ஆசை
---------------
அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற வேண்டும். ஆனால் ஆட்சி கவிழ வேண்டும்.

Monday, June 02, 2008

குஜ்ஜார் போராட்டம் சில எண்ணங்கள்

குஜ்ஜார் போராட்டம் கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது.ராஜஸ்தானின் மக்கள் தொகையில் 6-7 % வரை உள்ள இவர்களின் போராட்டம் மற்ற 90+% மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. மற்ற சமூக மக்களிடம் இதனுடைய எப்படி backlash இருக்கும் என்று குஜ்ஜார்கள் யோசித்ததாக தெரியவில்லை.

******

முக்கியமான மும்பை டில்லி FEDL ரயில் பாதையை ஆக்க்கிரமித்துள்ளதால் ராஜஸ்தானின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது வட இந்தியவே பெரும் பாதிப்புகுள்ளாகி இருக்கிறது

தலைக்குமேலே மின்சார கம்பியுடன் சேர்ந்த ரயில் பாதையை விட சில வெளி நாடுகளில் உள்ளது போல் மூன்றாம் ரயில் (Third rail system) எனப்படும் மின்சார தண்டவாளங்களை அமைப்பதின் மூலம் ரயில் மறியல் தமாஷ்களை ஒழிக்க முடியும்.


*******

ராஜஸ்தான் அரசு ஒரு தவறு செய்துவிட்டது. சென்ற வருடம் இதே கோஷ்டி இதே போன்றதொரு போராட்டத்தில் ஈடுபட்டது. இந்திய ஆட்சி முறையில் நிரந்தர தீர்வான 'கமிட்டி' அமைப்பதன் மூலம் அப்போதைக்கு அமைதி திரும்பியது. அதே சூட்டோடு இந்த குஜ்ஜார் போராட்ட குழுவை உடைத்திருக்க வேண்டும். குஜ்ஜார்கள் சில பல பிரிவுகளாக இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்ப்பட்டிருக்காது.

வெள்ளைக்காரன் விட்டுச்சென்ற பிரித்தாளும் சூழ்ச்சி என்னும் அருமையான நிர்வாக நடைமுறையை நம்முடைய அரசுகள் விடலாகாது

*******

உண்ணாவிரதம் இருப்பது, மனு கொடுப்பது, போன்ற போராட்ட வடிவங்களுக்கு இப்போது அரசு எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை. ஆர்ப்பாட்டம், சாலை மறியல், வன்முறை, கலவரம், துப்பக்கி சூடு இவ்வளவும் நடந்தால் தான் என்ன என்றே திரும்பிப்பார்க்கிறார்கள்.

*******
இவ்வளவு பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து போராடம் ஒருவேளை வெற்றி பெற்றால், இவர்களில் சில நூறு பேருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும்.

Tuesday, May 20, 2008

பூடானில் பிளந்துகட்டிய பிரதமர்!

உலகின் இளைய நாடாளுமன்றம் என்ற பெருமையை பெற்றிருக்கும் பூடான் நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டதில் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்புரை ஆற்றியிருக்கிறார்.

இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.

அப்படி என்ன சிறப்பு?

சொந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பாலும் பேச முடியாமல் தவிப்பவர், பக்கத்து நாட்டு பார்லிமென்டில் பிளந்து கட்டுகிறாரென்றால் சிறப்புதானே!!

Tuesday, February 19, 2008

முல்லாக்களின் தோல்வி

பாகிஸ்தான் தேர்தலில் முஷராப்பின் ஆசிப்பெற்ற அளும்கட்சி மட்டுமல்லாது முல்லாகளின் கூட்டணியான முத்தாஹிதா மஜ்லீஸ் ஈ அமல் (எம்எம்ஏ) வும் படுதோல்வி அடைந்துள்ளது. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த மவுலான ஃபஜ்லுர் ரகுமான் தோல்வி அடைந்துளார். சென்ற தேர்தலில் எம்எம்ஏ மூன்றாம் இடத்தில் தான் வந்தது.

பேனசிரின் கட்சி முதலிடத்திலும் முஷராப்பின் ஆசிபெற்ற PML(Q) இரண்டமிடத்திலும் வந்தன. அனாலும் பேனசிரின் கச்சியை உடைத்து PML(Q) வை ஆளும்கட்சியக்கினார்.
எதிர்கட்சி தலைவர் பதவியையும் எம்எம்ஏவுக்கு தந்தார். அதில் ஒரு ராஜ தந்திரம் உள்ளது.

முஷராப் அமெரிக்காவிடம் சென்று 'பார் எதிர்க்கட்சி வரிசையில் ஒரு முல்லா உட்க்கார்ந்து இருக்கிறான் , என் நான் ஆட்சி இழந்தால் அவன் தான் பதவிக்கு வருவான்' என்று பூச்சாண்டி காட்ட எம்எம்ஏ அவருக்கு உதவியது. அனால் இந்த தேர்தலில் ஆளும் PML(Q) வைவிட அதிகமாக உதை வாங்கியது எம்எம்ஏ தான்.
NWFP யின் மாநில ஆட்சியும் அவர்கள் வசம் இருந்தது அங்கு இப்போது வெறும் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

முழு விவரம்

Friday, February 15, 2008

நீர்மூழ்கி கார்


சுவிட்ஸர்லாந்தின் ரின்ஸ்பீட் நிறுவனம் ஸ்க்யூபா என்ற நீர்முழ்கி காரை அடுத்த மாதம் ஜெனீவாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. பத்து மீட்டர் அழம் வரை நீந்திச்செல்லக் கூடிய திறனுள்ளது. முற்றிலும் லிதியம் பேட்டரிகளால் இயக்கப்படும் இந்தக் வண்டி எந்த மாசையும் வெளியே உமிழாது.

Tuesday, February 05, 2008

ISBயின் வெற்றியும் அரசின் தோல்வியும்

லண்டன் ஃபைனன்ஸியல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தர வரிசையில் உலகின் முதல் 20 இடங்களுக்குள் இந்தியன் ஸ்கூல் அஃப் பிசினஸின் MBA டிகிரி இடம்பெற்றுள்ளது. நல்ல செய்தி என்றலும் தில் ஒரு நகை முரண் உள்ளது. என்னவென்றல், ISB யின் MBA டிகிரி AICTE ஒப்புதலை இதுவரை பெறவில்லை.

சட்ட ரீதியாக பார்க்கையில் நாட்டில் செயல்படும் பல டுபாக்கூர் கல்வி நிறுவனங்களும் ISBயும் ஒன்றுதான். ISBயோ எங்களுக்கு AICTE/UGCயின் முத்திரை தேவையில்லை என்று கூறுகிறது.

இது எவ்வாறு சாத்தியமானது?

NIIT, இதற்கு அதிக அறிமுகம் தேவையில்லை, எப்படி எந்த அரசு சான்றிதழும் பெறாமல் தரமான கல்வி அளிக்கிறதோ அப்படித்தான். தொடர்ந்து நற்பெயரை தக்க வைத்துக்கொண்டாதே NIITக்கு போதுமானதாக இருந்தது.

ISB கெல்லாக், வர்ட்டன் மற்றும் லண்டன் மேலாண்மை கல்விச்சாலைகளுடனான ஒப்பந்தங்கள் மற்றும் முதல்தர ஆசிரியர்களின் உதவியால் AICTE யுடன் இணையாமலேயெ நல்ல கல்வியை அளிக்க முடிகிறது. இப்போது மேலாண்மை கல்விச்சாலைகளின் சர்வதேச சங்கமான AACSBயுடன் சேர முயற்சிக்கிறது.

படத்திட்டம்,கட்டணம், சேர்க்கை, போதனை, ஹாஸ்டல் உணவு, செல்போன் கொண்டுவரலாமா, என்று எல்லாவற்றையும் அரசு தான் கட்டுபடுத்த வெண்டும் என்று குதிப்பவர்கள் ISB மற்றும் , தேசிய ஹோட்டல் தொழில் கூட்டமைப்பு நடத்தும் ஹோட்டல் மேலாண்மை கல்வித்திட்டதியும் (இதற்கும் 'அரசு அனுமதி' கிடையாது) பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் தலையங்கம்

Thursday, January 03, 2008

முஷாரப்,பிலாவல்,பக்னர்

வழக்கமாக NDTV , CNN IBN போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் இடம்பெறும் விவாதங்களையும் SMS மூலமாக நடைபெறும் ஓட்டெடுப்புக்களையும் நான் பொருட்படுத்துவதில்லை.

இவற்றால் எந்த ஒரு பெரிய பலனும் வந்துவிடாது என்பதால் மட்டுமல்ல, இவற்றில் பங்குபெருவோர் எதையும் செய்யமல் பெரிதாக சாதித்து விட்டதைப்போல் எண்ணுவதாலும் கூட.

நேற்று NDTV ல் ஓட்டெடுப்புக்கான கேள்வியை தற்செயலாக் பார்க்க நேர்ந்தது.

முஷாரப் இப்போது பதவி விலக வேண்டுமா? என்பதே கேள்வி.

இது நம்மைப் பொருத்த வரை தேவையில்லாதது மட்டுமல்ல் ஒரு சொசெசூ முயற்சியும் கூட.

பாகிஸ்தானின் அதிபர் பதவியில் தொடரவேண்டுமா என்கிற கேள்வியை இந்திய நேயர்களிடம் ஒரு தொலைக்காட்சி முன்வைக்க வேண்டிய அவசியம் என்ன? இதே போல் ஒரு பாகிஸ்தான் டிவி மன்மோகனை சிங்கைப்பற்றி கருத்துக் கணிப்பு நடத்தினால் நாம் ஏற்றுக்கொள்வோமா.

பாகிஸ்தானின் நிலவரத்தைப் பற்றி தெரிந்து கொண்டு ராஜாங்க ரீதியாக நடவடிக்கை எடுப்பது வேறு, இதுபோல் வெளிப்படையாக மூக்கை நுழைப்பது வேறு.
-----

குடும்ப அரசியலின் பரிணம வளர்ச்சியாக இப்போது 19 வயது பிலாவலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக வந்துள்ளது சோகத்திலும் ஒரு காமெடி. பிலாவல் புட்டோ ஜர்தாரி, ஜுல்பிகார் அலி புட்டோவை நேரில் கண்டது கூட இல்லை.

ஜியா உல் ஹக் இறந்த போது ஒரு வயது இருக்கும்.

'ஜின்னாவுடனும், ஜுல்பிகார் அலி புட்டோவுடனும் அரசியல் செய்த நான் இப்போது யார் யாருடனோ அரசியல் செய்ய வேண்டியுள்ளதே' என்று கிழ போல்டு யாரும் சொல்லாமல் இருக்க பிலாவலுக்கு என் வாழ்த்துக்கள்.


-----

ஸ்டீவ் பக்னர் இந்த முறையும் சொதப்பியதாக தெரிகிறது. நான் சிறு பிள்ளையாய் இருந்த காலத்திலிருந்து அவர் அம்பயராக இருக்கிறர். சீக்கிரம் ரிடையர் ஆவது நலம்.

---
முஷாரப்,பிலாவல்,பக்னர் இவங்கள வெச்சு இன்னிக்கு மசாலவை அரச்சாச்சு (எவ்வளவு நாள் தான் மொக்கைப்பதிவுனு சொல்லறது, பதிவுலகம் அடுத்த கட்டத்துக்கு போக வாணாவா?)