Monday, August 11, 2008

ரஷ்யா ஜார்ஜியா போர்- இந்திய அரசு அதிரடி முடிவு!!

கடந்த சில நாட்களாக ரஷ்யா ஜார்ஜியா நாடுகளுக்கிடையே தென் ஓஷேஷிய பகுதி தொடர்பாக போர் நடப்பது தெரியும்.

நானும் எவ்வளவோ தேடிப்பார்த்துவிட்டேன், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுரவுத்துறை எந்த கருத்தையுமே சொல்லவில்லையே ஏன்?

சில வருடங்களுக்கு முன்பு உலகத்தில் நடக்கும் அத்தனை விவகாரங்களுக்கும் பஞ்ச் டயலாக் சொல்லும் க.கந்தசாமியாக விளங்கிய இந்திய வெளியுரவுத்துறை இப்போதெல்லாம் மவுனம் சாதிக்கிறது, இல்லையென்றால் 'பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும்' என்பது போன்ற வழவழா கருத்தை சொல்லுகிறது.

நம்மால் ஒன்று கையால் ஆகாது பிறகு வாய்ச்சவடால் மட்டும் எதற்கு என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டார்களோ? உண்மை அதுவெனில் மிக்க மகிழ்ச்சி.

'நம்ம வழியை நாம பாத்துப்போம் , நமக்கு என் ஊர் நாட்டமை' என்று நினைத்தால் நாட்டிற்கு நல்லது.