Saturday, January 23, 2010

IPL பவுன்சர்

ஐபிஎல் ஏலம் பாகிஸ்தானில் ஏகப்பட்ட பீலிங்ஸை கிளப்பி விட்டிருக்கிறது. அந்த நாட்டில் பலரும் நம்மூரில் சில பேரும் செம கடுப்பில் இருக்கிறார்கள். வியாபாரத்தையும் தேச பக்தியையும் நம்மாட்களும் பாகிஸ்தானியர்களும் போட்டு குழப்பி வருகிறர்கள்.
இதேபோல டாடா ஜாகுவாரை வங்கினாலும் மிட்டல் ஆர்செலரை வாங்கினாலும் தேவயற்ற தேசபக்தி டேகை ஒட்டிவிடுகிறர்கள்.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் பல கருத்துக்கள் பேத்தலாக உள்ளது.

1. யாரும் ஏலம் எடுக்கப்போவதில்லை என்று தெரிந்திருந்தால் ஏலம் விடாமலேயே இருந்திருக்கலாம். என்று ஒரு வாதம். அப்படி செய்திருந்தால் என்னவாகீருக்கும். இப்போது புலம்புபவர்கள்
'ஐயையோ! ஏலத்தில் பாக் விரர்களை சேர்க்கவில்லயே, நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பை தடுக்கிறார்களே' என்று வேறு விதமான ஒப்பாரி வைத்திருப்பார்கள்.

2. என்ன இருந்தாலும் உலக சாம்பியன், யாரையும் ஏலம் எடுக்காதது தப்பு.
இன்றைய கால்பந்து (காற்பந்து ?) உலக சாம்பியன் இத்தாலி, எத்தனை இத்தாலிய வீரர்கள் இப்போது EPLல் விளையாடுகிறர்கள்?

இறுதியாக பாகிஸ்தான் வீரர்களை நெதட்லாந்து, கானடா நாட்டு வீரர்களுடன் ஒப்பிட்டு கானடா மற்றும் நெதர்லாந்திற்கு களங்கம் ஏற்ப்படுத்தும் லலித் மோடியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

சொல்வதற்கு மேலும் சில கருத்துக்கள்(!) இருந்தாலும் சனிக்கிழமை அன்று இவ்வளவு சுறுசுறுப்பு கூடாது என்பதால் அப்பீட்டாகிறேன்.

Wednesday, January 06, 2010

சென்று கொடு வென்று விடு

சென்ற வருடம் பதிவு எதுவும் எழுதாமல் சாவியானேன், இந்த வருடமாவது இயன்ற வரை எழுத வேண்டும்.


கடந்த வார இறுதியில் கைய்யில் தட்டுபட்ட ஒரு நூலை படிக்கத்துவஙினேன். அதில் வரும் சில அரிய கருத்துக்கள்.



*எந்த வேலையை செய்தாலும் பலனை எதிர்பாராமல் ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும்.
*நம் செயல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
*நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம்.

மேற்படி கர்ம யோக மேட்டர்களை பொதுவாக நாம் கீதைபேருரைகளில் படித்திருப்போம். அல்லது கேட்டிருப்போம்.
கர்ம யோகத்தைப் பற்றியும், நிஷ்காம கர்மத்தையும் அலுவலக் சூழலில் பொருத்தி புனையப்பட்ட ஒரு நிர்வாகவியல் கதை "GO GIVER" புத்தகம்.

பொதுவாக மேலாண்மை நூல்களையும் சுய முன்னேற்ற நூல்களையும் நான் படிப்பதில்லை.

வேண்டா வெறுப்பாக இந்த நூலைப்படிக்க துவங்கினேன். ஒவ்வொரு அத்தியாயமும் கீதை தத்துவங்களையே சொல்வதால் பின்குறிப்பில் ஏதாவது இருக்குமா என்று பார்த்தேன். ம்ஹும்ம்.

எப்படியோ மீண்டும் கீதையை புரட்ட வைத்த நூலாசிரியர்களுக்கு நன்றி.