Friday, August 18, 2017

ஜரியா சுரங்கம்- நூறாண்டுகளாக எறியும் தீ

ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கியமான நிலக்கரி நகரம் தன்பாத். இந்திய நிலக்கரி தேவை பெருமளவு பூர்த்தியாகும் இடம். தன்பாத்தை சுற்றியுள்ள பகுதியில் பல நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ளன.

தன்பாதிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலுள்ள ஜரியா (Jharia) என்னும் ஊரில் மொத்தம் 9 சுரங்கங்கள் உள்ளன, அவற்றில் 7 திறந்த வெளி சுரங்கங்கள் (open cast), மற்ற இரண்டு மூடிய சுரங்கங்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்த சுரங்கங்கள் குத்தகைக்கு விடப்பட்டன, குத்தகைதாரர்கள் பிகாரின் பல பகுதிகளிலிருந்து கூலியாட்களை கொண்டுவந்து நிலக்கரி எடுத்தனர், எந்தவிதமான நவீன உபகரணங்களோ பாதுகாப்போ இல்லாமல் கிடைக்கும் இடங்களிலெல்லம் கரி தோண்டி எடுத்தனர்.

ஜரியாவில் கிடைக்கும் கரி கோகிங் கோல் எனப்படும் வகையை சேர்ந்தது , அதிக மாசற்ற, உயர் எரிநிலை கொண்ட கரியாகும்.

 நிலக்கரி சுரங்கங்கள் மின்னல், வெளிச்சத்திற்காக பந்தம் போன்றவைகளை பயன் படுத்துவது, கரிக்கற்கள் ஒன்றிடன் ஒன்று உராய்வது போன்ற காரணங்களால் தீப்பற்றிக்கொள்ளும், அப்படி 1916ம் ஆண்டில் ஒரு நாள் ஜரியாவில் தீப்பற்றியது, இன்று வரை அணைக்க  முடியவில்லை.
எரியும் சுரங்கத்திற்கிடையே  தொழிலாளர்கள், வியாபாரிகள் அவர்தம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள், அவ்வப்போது பூமியின் அடியில் உள்ள சில வாயுக்கள் வெப்பத்தில் வெடிக்கவும் செய்யும் , நிலம் உள்வாங்கவும் செய்யும்.  இது போன்ற நிகழ்வுகளில் உயிர் இழந்தவர்களும் காயமுற்றவர்களும் பலர் உண்டு


Image courtesy Counterview.org


1974 இந்த சுரங்கங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு பாரத் கோகிங் கோல் நிறுவனத்தின் கீழ் வந்தன, அப்போதும் தீயை அணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வி அடைந்தன.

பொதுவாக இது போன்ற பெரும் தீயை  திரவ நைட்ரஜன்  கொண்டு அணைக்கலாம். ஆனாலும் அந்த முறையும் பலன் கொடுக்கவில்லை.

இந்த தீயினால் இதுவரை சுமார்  12 லட்சம் கோடி ரூபாய்  மதிப்பிலான நான்கு கோடி டன் கரி  எறிந்து வீணகியுள்ளது மேலும் பல லட்சம் கோடி மதிப்பிலான 200 கோடி டன் கரி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

உலகளவில் நிலக்கரி சுரங்கங்களில் சராசரியாக 1000ம் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எறிந்துகொண்டிருக்கிறது

தொடர்புடைய சுட்டிகள்
Fresh move to douse Jharia’s coal fires
Burning for over 100 years, Jharkhand’s underground fire affects 5 lakh people