Tuesday, February 27, 2007

டிஜிட்டல் கேமராவும் டூரிஸ்டுகளும்

டிஸ்கி 1- இந்த பதிவு படமெடுப்பத்தை நல்ல பொழுதுபோக்காக கொண்டிருப்பவர்களையோ, அல்லது படமெடுப்பதில் ஆத்ம த்ருப்தி அடைபவர்களையோ கருத்திற்கொண்டு இடப்பட்டதல்ல.

டிஸ்கி 2- தலைப்பு தமிழில் இல்லாததால் இந்த பதிவிற்கு வரிவிலக்கு கிடையாது


குழுவாக சுற்றுலாசெல்லும் போது கண்ணால் காண்பதையெல்லாம் கேமெராவில் சுடும் அன்பர்களே,

நீங்கள் வைத்திருப்பதோ டிஜிட்டல் கேமரா, படம் எடுப்பதோ கட்டடத்தை, யாராவது ஒருவர் படமெடுத்தால் போதுமே ! பிறகு படங்களை மின்மடல் மூலமாகவோ ஃபோட்டோ ஷேரிங் மூலமாகவோ பரிமாறிக்கொள்ளலாமே!

அவ்வளவு ஏன், வரலாற்று முக்கியத்துவம் அல்லது முக்கிய சுற்றுலாத்தலங்களின் படங்கள் ஏற்கனவே அனேக முறை படமேடுத்தாயிற்று, பல படங்கள் இணையத்தில் இருக்கும், ஓசியில் கிடைக்கும், கூகிளாண்டவரின் அருளுடன் அவற்றைப்பெறலாம்.

ஆகவே கட்டங்களையோ மரம் செடி கொடிகளையோ படம் எடுப்பது வேஸ்ட்!

அதனினும் வேஸ்ட் பலபேர் டிஜிட்டல் கேமராவில் அவற்றை படமெடுப்பது.

படமெடுப்பது வேஸ்டெனில் கேமரா எதற்கு? நம் கையில் கேமரா இருப்பது மனிதர்களை படமெடுக்கவே, உடன் வரும் நண்பர்களையும் அன்பர்களையும் படமெடுத்தாலே போதும் என்பது இந்தச்சிறியோனின் அபிப்பிராயம்

நம்மை நிறைய படமெடுத்துக்கொள்வதிலும் ஏகப்பட்ட தர்மசங்கடங்கள் உண்டு, குறிப்பாக மென்படங்களை எவ்வளவு பிரதிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம் எனபதாலும் , அதனை வைத்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்யலாம் என்பதாலும் சற்று கவனம் தேவை.

பொதுவாக எனக்கு அவ்வளவாக் படமெடுத்துக்கொள்வது பிடிக்காது, அதனாலேயே இந்திவிற்க்கு வெளியே பல இடங்களிலும் இந்தியாவில் சில இடங்களிலும் நிலவும் CCTV பொருத்தும் போக்கை வெறுக்கிறேன், CCTV கேமராக்களை கண்ட இடங்களில் பொருத்துவதை எதிர்த்து போராட வேண்டும்.

பாதுகாப்புக்காரணங்கள் சொல்லப்பட்டாலும் , அவை ஏற்ப்புடையவை என்றாலும் சீக்கிரமே இதற்கு மாற்று கண்டுபிடிப்பது நலம். குறைந்தபட்சம் CCTV பொருத்துவதற்கான வரன்முறைகள், எவ்வளவு நாட்கள் படங்களை வைத்திருக்கலாம், படங்களின் சேமிப்பிற்க்கு தேவையான பாதுகாப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தவேண்டும். இதனை அரசாங்கம் செய்யாமல் IEEE, ISO போன்ற தொழில்முறை குழுக்கள் வரையறுக்கலாம்.

Wednesday, February 07, 2007

சவுதாம்டனில் பிடித்த ஏழரை

வேலைக்காக வெளிநாட்டுப்பயணம் இந்த முரை ஐக்கிய ராஜ்ஜியத்தின் சவுதாம்டன் நகர். இந்தியாவிலிருந்து லன்டன் வரை ஜெட் ஏர்வேஸில் சொகுசு பயணம். லன்டனிலிருந்து டாக்ஸி.

சவுதாம்டன் வந்ததும் பிடித்தது சனி.
ஹோட்டல் அறையை முன்பதிவு செய்துவிட்டு வாடகைக்கு முன்பணம் கொடுக்க கம்பனி மறந்தால் அந்தப்பணத்தை நான் கட்டினேன். சமயம் பார்த்து கார்பரேட் கார்ட் மக்கர் செய்தது ஏடிஎம்மில் காசு எடுக்க முடியவில்லை, என் தனிப்பட்ட வங்கி கணக்கின் டெபிட் கார்ட் வேலை செய்ததால் பிழைத்தேன்.

அடுத்த நாள் கம்பனி நிர்வாகத்தை ஒரு பிடி பிடித்தபின் நிலைமை சீரடைந்தது. அடுத்த நாள் இந்தியாவிலிருந்து வரும் இன்னொரு நாபரிடம் பணம் தருவதாக சொன்னார்கள். அவர் பணத்தை பெட்டியில் வைத்து Check in செய்துவிட்டார். பெட்டியோ லன்டனில் கைக்கு வரவில்லை. அவருக்கும் சேர்த்து வடகையை செலுத்த வேண்டிய நிலைமை வந்தது. ஒருவழியாக 36 மணி நேரத்திற்க்குப்பின் பெட்டி கைக்கு வந்தது. கார்பரேட் கார்டும் வேலை செய்தது. சுபம்.

அலுவல் ரீதியாக குறைந்த காலத்திற்கு வெளிநாடு செல்பவர்கள் கம்பனி தரும் அந்நிய செலாவணி தவிர கொஞ்சமாவது சொந்தமாக அந்நிய செலாவணியைத் (கரன்ஸியாக) வாங்கிக்கொள்ளவும் . எங்கும் அலையவேண்டியது இல்லை. ஏர்போட்டிலேயே கிடைக்கும்.
சொந்தப்பெயரில் சர்வதேச கிரெடிட் (அதிக அளவு லிமிட்டுடன்) மற்றும் டெபிட் கார்டுகளை எடுத்துச்செல்லவும்.ஹோட்டல் வாடகை மற்றும் டாக்ஸிக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும். இல்லை அதற்க்கும் சேர்த்து அட்வான்ஸ் வாங்கவும். குறிப்பாக பணத்தை பெட்டியில் வைக்காதீர்கள். கொஞ்சம் லோ டெக் காக தெரிந்தாலும் பணத்தை கரன்ஸியாகவோ, ட்ராவல்லெர்ஸ் செக்காகவோ எடுத்துச்செல்லவும். ஏனென்றால் ட்ராவல் கார்ட் போன்ற அஃறிணைப்பொருட்கள் சமயம் பார்த்து கழுத்தறுக்ககூடியவை என்பதை அனுபவதில் கண்டேன்.