Friday, December 28, 2007

பேனசிர் கொலை, ஏன்?

25/01/2004

அணு ஆயுத கள்ளச்சந்தை நடத்தியதை ஒப்புக்கொண்டார் அப்துல் காதர் கான்.

கானுக்கு பொது மன்னிப்பு வழங்கினார் முஷாரப்.

அணு ஆயுத கள்ளச்சந்தையைப் பற்றி அமெரிக்க அப்துல் காதர் கானிடல் விசாரிக்கத் தடை விதித்தார் முஷராப்

2007
அமெரிக்காவின் உந்துதலில், தேர்தலை நடத்தவும், பேனசிரை நாட்டுக்குள் அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டார் முஷாரப்.

26/9/2007
வெற்றி பெற்றால் அப்துல் காதர் கானை IAEA விடம் ஒப்படைப்பேன் - பேனசிர்

27/12/2007 பேனசிர் படுகொலை


இதுதான் காரணம் என்று இல்லை, ஆனால் இன்னும் பல வருடங்களுக்கு இது போன்ற பல conspiracy theories உலா வரும்.

Friday, November 16, 2007

கர்நாடகம் காட்டும் வழி!!

கர்நாடகா மாநிலத்தில் 2004 ல் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, பாஜக முதலிடத்திலும் காங்கிரஸ் இரண்டாவதாகவும் தேவகவுடாவின் ஜத(எஸ்) மூண்றாவதகவும் வந்தன.

ஏதேனும் இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலை. முதல் இருபது மாதங்கள் , காங்கிரஸின் தரம் சிங் முதல்வராக இருந்தார், அவரை கவிழ்த்து பின்னர் குமாரசாமி ஜதவின் சார்பில் ஆட்சியை பிடித்தார்.

இப்போது பா.ஜ வின் எடியூரப்பா விடம் ஆட்சி வந்துள்ளது.

ஆக ஒரே சட்ட சபையை வைத்துக்கொண்டு 20 மாத காங்கிரஸ் ஆட்சி, 20 மாத ஜத(எஸ்) ஆட்சி, 20 மாத பா.ஜ ஆட்சி என்று சரிசமமாக ஆட்சி பகிரப்பட்டுள்ளது.

மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட்டுள்ளது.

இதில் மற்றொரு நன்மையும் உள்ளது. வெறும் 20 மாதங்களே ஆட்சி நடப்பதால் எந்த ஒரு தொலைனோக்குத் திட்டதையும் செயல் படுத்தமுடியாது. இதன்மூலம் பல சீரழிவுகள் தடுக்கப்படும்.


28% ஓட்டு வாங்கி விட்டு ஒரே கட்சி 5 ஆண்டுகள் குப்பை கொட்டுவதை விட இது தேவலை.


நம்முடைய தேர்தல் முறை வாங்கும் ஓட்டின் அளவிற்கேற்ப ஆட்சியை பகிர்ந்துகொள்ளும் விகிதாச்சார முறையில் இல்லை என்றாலும் , கர்நாடகத்தில் நடந்த இந்த அரசியல் விபத்தின் மூலம் எதிர்காலத்தில், பாராளுமன்ற முறையிலேயே விகிதாச்சார முறையையும் உள்வைத்து விடமுடியும் என்று புலனாகிறது.

இதனை வெளிக்கொணர்ந்த கர்நாடக அரசியல் மேதை தேவேகவுடருக்கு என் நன்றிகள்.

-----
இப்படி எழுதிய 48 மணி நேரத்தில் ஆட்சி கவிழ்ந்து விட்டது. என் கணிப்பை பொய்யாக்கிய கர்நாடக அரசியல் மேதை தேவேகவுடருக்கு நன்றி.

Tuesday, November 06, 2007

படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் இராணுவம்


பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு எல்லை மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தை தலிபான் கைப்பற்றியுள்ளனர். எதிர்த்து நின்ற பாகிஸ்தானிய துருப்புக்களை கைது செய்து ஒவ்வொரு சிப்பாயிடமும் ௫. 500 கொடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.



மாவட்டத்தின் அரசு அலுவலகங்களில் பரந்த பாகிஸ்தான் கொடிகளை இறக்கி தலிபான் கோடி பறக்கவிடப்பட்டுள்ளது.


இதுவரை தன்னாட்சி பெற்ற பழங்குடிப் பகுதிகளிலேயே இருந்து வந்த தலிபான் ஆதிக்கம் இப்போது பாகிஸ்தானின் ஒரு முழு மாவட்டத்தையும் தன் கைக்குள் கொண்டு வரும் அளவுக்கு வளர்ந்துள்ளது.


மூன்று போலிஸ் நிலையங்களை கடந்த இரண்டு நாட்களில் கைப்பற்றியுள்ளனர். சுற்றுலா நகரமான ஸ்வாட்டில் சுமார் 500 ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. 50000 மக்கள் இதுவரை வெளியேறியுள்ளனர்.
முஷாரப் அவசர நிலையைப் பிரகடனம் செய்த பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.







Monday, October 29, 2007

கலக்கற BCCI! புது ஆளு, புது நீக்கம், அதே காரணம்!

டிசம்பர் 2005







இந்திய அணி தொடர் தோல்வி, மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை குறிப்பாக கங்குலி க்கு நிறைய வாய்ப்பு அளித்தும் அவர் சரியாக விளையாடவில்லை கங்குலியை நீக்க வேண்டும்,
கங்குலி நீக்கப்பட்டார்.






ஜனவரி 2007


இந்திய அணி தொடர் தோல்வி, மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை குறிப்பாக சேவாகிற்கு நிறைய வாய்ப்பு அளித்தும் அவர் சரியாக விளையாடவில்லை சேவாக்கை நீக்க வேண்டும்,
சேவாக் நீக்கப்பட்டார். கங்குலி சேர்ப்பு



அக்டோபர் 2007









இந்திய அணி தொடர் தோல்வி, மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை குறிப்பாக திராவிடுக்கு நிறைய வாய்ப்பு அளித்தும் அவர் சரியாக விளையாடவில்லை திராவிட்டை நீக்க வேண்டும்.

திராவிட் நீக்கப்பட்டார். சேவாக் சேர்ப்பு





2008

யார்?

Wednesday, October 24, 2007

தெருக்களை சுத்தம் செய்ய சீன டெக்னிக்


சீனாவின் ஹெபேய் மாகணத்திலுள்ள கிங்ஹுவாங்க்டோ நகரில் ஒரு ட்ரைசைக்கிள் மற்றும் ஒரு டஜன் துடைப்பங்களைக்கொண்டு தெருக்களை சுத்தம் செய்யும் வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மோட்டரில் இணைக்கப்பட்ட துடைப்பக்கள் இடப்புரமாகவும் வலப்புரமாகவும் சுழலச்செய்து தெருக்களில் உள்ள குப்பைகளை ஓரமாக குவிக்கிறது. பின்னர் ஓரமாக குவிந்த குப்பைகளை வேறொரு இயந்திரம் மூலமாக அள்ளுகிறார்கள்.


நன்றி Ananova, Daily Times.

Saturday, October 06, 2007

Dragons den

பிபிசி 2 தொலைக்காட்சியில் வந்த ஒரு ரியாலிடி நிகழ்ச்சி.



ஐந்து தொழில் முதளீட்டாளர்கள் தான் ட்ராகன்ஸ். இவர்களிடம் தொழில் முனைவோர் வந்து தாங்கள் கண்டுபிடித்த சாதனத்தைப்பற்றியோ நடைதி வரும் தொழிலைப்பற்றியோ கூறி, அதனை விரிவாக்கவும் , பொருட்களை
சந்தைப்படுத்தவும் உதவி கேடபார்கள். ட்ராகன்ஸ் தரும் பணத்திற்கு பதிலாக பிசினஸில் பங்குகளை தருவார்கள்.



ட்ராகன்கள் இவற்றை ஆய்வுசெய்த்து கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு, நல்ல முதலீடாகப்பட்டால் பணத்தை போடுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியிலிருந்து பலர் வெறும் கையுடன் தான் திரும்பினார்கள். நல்ல கண்டுபிடிப்புகளைக்கொண்டு வருபவர்களை வெகுவாகப்பாராட்டி , சந்தைப்படுத்க்டும் முறைகளை சொல்லிக்கொடுத்து முதலீடும் செய்தார்கள்.

நல்ல நிகழ்ச்சி. நம்மூரிலும் இப்படி எதாவது செய்யலாம். நிகழ்ச்சியைப் பற்றி படிக்கவும் பார்க்கவும்.

Friday, October 05, 2007

இரண்டு சர்வாதிகாரங்களின் கதை.

பாகிஸ்தான், பர்மா என்று இந்தியாவின் இரண்டு அண்டைநாட்டுச் சர்வாதிகாரங்கள் இப்போது சிக்கலில் இருக்கின்றன. இரண்டும் வெவ்வேறு திக்கில் பயணிக்கின்றன.

நவாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு (மறுபடியும்) நாடுகடத்தப்பட்ட போது பெரும் கொந்தளிப்பி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை .

கடந்த ஐந்து ஆண்டுளாக (முன்னாள் சிட்டிபாங்க் அதிகாரி) பிரதமர் சவுகத் அஜீஸ் தலைமையில் நடக்கும் பொருளாதார சீர்திருத்தமும், அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணம்.

மதவெறி அமைப்புக்கள் பலமாக இருந்தாலும், இன்றைய பாகிஸ்தானி மிடில் க்ளாஸ்களிடம் மேற்கத்திய மோகமே அதிகமாக உள்ளது. லாகூர் கல்லூரிப் பெண்கள் அணியும் உடைகளிலேயே இதைக்காணலாம். பாகிஸ்தானின் நடுத்தர வர்க்கம் தற்போது அரசியலில் கவனம் செலுத்தாமல் ஜப்பான் தென் கொரியா, மலேசியா, சீனா, இந்தியா போன்று இன்னொரு ஆசிய புலியாக உருவாகத்தான் நினைக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் செய்தி தொலைகாட்சிகளின் தயவால் வெளிப்படையான அரசியல் வவாதங்கள் நடக்கின்றன. தலைமை நீதிபதி பதவிநீக்க விவகாரத்தை அடுத்து நீதிமன்றங்களும் தன்னிச்சையாக இயங்குகின்றன.

இதுவே பர்மாவில், ஆங்க் சான் சூ கீ போன்றொரின் செய்திகள் தணிக்கை செய்யப்படுகின்றன , ஒரு செய்தி கூட வெளியிடப்படுவதீலை. கண்டிப்பாக ராணுவத்தை மீறி நீதிமன்றங்களால் செயல்பட முடியாது.

இந்த வேறுபாட்டுக்கு என்ன காரணம்? இரு நாடுகளும் பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சியின் கிழிருந்தாலும் (பாகிஸ்தானில் விட்டு விட்டும், பர்மாவில் தொடர்ந்தும்) பாகிஸ்தானிய ஆட்சி ஓரளவுக்கு திருந்துவது போல் தெரிவதற்க்கு காரணம் உலக நாடுகள் இன்று வரை பாகிஸ்தானை புறக்கணிக்காமல் அரவணைத்து செல்ல முயன்றது தான். ஆனால் பர்மாவின் மீதோ தொடர்சியாக பொருளாதார தடை விதித்து பர்மா நாட்டையே தனிமைப்படுத்தி விட்டார்கள். இப்போது பர்மா அரசு யாரையும் மதிப்பதில்லை. உலக மீடியா சொல்வதையும் கண்டுகொள்வதில்லை.

தொடர்ந்து வரும் வெளிநாட்டு அரவணைப்பினால் பாகிஸ்தானிய ஆட்சியில் ராணுவந்தின் பிடி நழுவுகிறது.

தொடர்ந்து வரும் வெளிநாட்டு புறக்கணிப்பினால் பர்மீய ஆட்சியில் ராணுவந்தின் பிடி இறுகுகிறது.

Daily Times என்னும் பாகிஸ்தானிய நாளிதழில், சிங்கை பொருளாதார பேராசிரியர் கிஷோர் (அட இவரும் கிஷோர் தான்) மக்பூபானியின் கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் வாசிக்க.

Friday, September 28, 2007

பர்மாவை அனைவரும் கும்மக் காரணம் என்ன?

புத்தபிட்சுக்களின் போராட்டத்தின் விளைவாக இன்று மியன்மர் நாடு (பர்மா) உலக மீடியாவிற்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு பர்மீய இராணுவ ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

இப்படி அனைவரும் பர்மாவை கும்மு கும்மு என்று கும்மக் காரணம்?

அது ஒன்று மட்டும் தான் சர்வாதிகார நாடா? இல்லையே.

உலகிலுள்ள சர்வாதிகார நாடுகளின் பட்டியலைப் போடுங்கள். அவற்றில் பெரும்பான்மையானவை ஆப்பிரிக்க நாடுகள்.

இவர்களை எதிர்த்தால் நிறவெறியன் என்ற பட்டம் வந்து சேரும்.

மீதம் இருக்கும் சர்வாதிகார நாடுகளில் பெரும்பான்மையானவை முஸ்லிம் நாடுகள். எந்த முற்போக்குவாதியாவது முஸ்லிம் நாடுகளை எதிர்ப்பானா?.

இவற்றை தள்ளிப் பார்த்தால் ஆறு கம்யூனிச சர்வாதிகார நாடுகள் இருக்கின்றன. அவையும் முற்போக்குவாதிகள் எதிர்க்கத்தக்கவை அல்ல.

எஞ்சி நிற்பது பர்மா மட்டுமே. அதனால்தான் அனைவரும் வெளுத்து வாங்குகிறர்கள்.

On Myanmar we can be both democratic and politically correct. Hurray!!

Tuesday, September 11, 2007

இராம்பாக்கம் மஹாஸம்ப்ரோக்ஷணம்



அடியேனின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் இராம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேதவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோவில் மஹாஸம்ப்ரோக்ஷணம் வரும் ஞாயிறு (16.09.2007) அன்று காலை 8:10 மணிக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க ராமானுஜ மஹாதேசிகன் ஸ்வாமி முன்னிலையில் நடக்க இருக்கிறது.



இந்த வைபவத்திற்கு முன்னதாகவே வந்திருந்து எம்பெருமானின் க்ருபா கடாக்ஷத்திற்கு பாத்திரராகும்படி அனைவரையும் ப்ரார்த்திக்கிறேன்.






Monday, September 10, 2007

செயலிழந்துவிட்ட பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகானத்தை ஒட்டிய , பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் வஜீரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சில ஆண்டுகளாக தலிபான்களிடம் திக்குமுக்காடுவதை கண்டுவருகிறோம்.

கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சி கிட்டத்தட்ட பாகிஸ்தான் ராணுவம் செயலிழந்து விட்டதை காட்டுகிறது. இருநூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தான் விரர்கள் (அரசு 150 என்கிறது, பழங்குடிகள் 300 என்கிறார்கள்) வெறும் பத்து தாலிபான் ஆதரவு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்கள்.
எந்த தாக்குதலும் இன்றி, பாகிஸ்தான் ராணுவம் ஒரு தற்காப்பு முயற்சி கூட எடுக்காமல், ஒரு துப்பாக்கி குண்டு கூட செலவாகாதவகையில், எதிர்ப்பே இன்றி சரணடைந்துள்ளார்கள். இதில் ஒரு துணை கர்னலும் அடக்கம். ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு இன்று 254 பேர் விடுவிகிக்கப்பட்டுளனர். (அப்போ கவர்மென்ட் சொன்னது தப்பு)

ஏன் இப்படி unprofessionalஆக நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. எனக்கு படுகிற காரணங்கள்.

1. அரசியலில் வெகு ஆழமாக ஈடுபட்டு சண்டை போடும் திறமையை இழந்துவிட்டார்கள்.
2. கடந்த எட்டாண்டுகளாக பாகிஸ்தானின் பல்வேறு PSUக்களுக்கு இராணுவ அதிகாரிகள் தான் சேர்மன், எம்டி, எல்லாம், இரெயில்வே உட்பட. இப்படி சொகுசாக இருப்பவர்களை சண்டைபோடச் சொன்னால்.
3. அல்கொய்தா/தாலிபான் ஆட்கள் ராணுவத்துக்குள் முழுமையாக ஊடுருவிவிட்டார்கள்.

என்ன இருந்தாலும் உள்நாட்டுப் பாதுகாப்பு இப்படி பலவீனப்பட்டுள்ள நிலைமை மிகவும் ஆபத்தானது. பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.

Tuesday, September 04, 2007

அணுசக்தி ஒப்பந்தம்-சீனா-Mitrokihn-

Mitrokihn Archives என்னும் புத்தகம் வெளிவந்தபோது நாடு சில நாட்கள் அல்லோலகல்லோலப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம். சில நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல அந்த விஷயமும் அமுங்கிப்போனது. அந்த நாளைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு KGB தாராளமாக 'உதவி' செய்ததையும் அதற்கு தக்க வகையில் அவர்கள் தேசதுரோக கைம்மாறு செய்த்தாகவும் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது.


இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததை இன்று இடதுசாரிகள் தீவிரமாக எதிர்க்கிறார்கள், இன்னும் சில பல ஆண்டுகளில் சீனாவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் (ஒருவேளை) மிட்ரோகின் போல யாராவது புத்தகம் எழுதப்புறப்படலாம். ஆகவே எதிர்ப்பவர்களுக்கு கொஞ்சம் எச்சரிக்கை தேவை. இடதுசாரிகள் அத்வானியை போல் எதிர்பது போல் எதிர்த்து ஆதரிப்பது போல் ஆதரித்துவிடலாம். :-)

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததை நான் ஆதரிக்கிறேன். காரணம்.

1. சீன அரசின் People's Daily அன்றாடம் இந்த ஒப்பந்தத்தை கரித்துக்கொட்டுகிறது
2. எங்களுக்கும் இது போன்ற ஒரு ஒப்பந்தம் வேண்டும் என்று முஷாரப் தினமும் கேட்பது

முஷாரப் பற்றி எழுதும் போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது. இந்த ஒப்பந்ததின் ஆரம்பகட்டத்தில் அவர் பாகிஸ்தானுக்கும் இது போன்ற ஒப்பந்ததை கோரி ஒரு மாற்று வழியையும் முன்வைத்தார்.

அதாவது அமெரிக்காவே தன்னுடைய ஆட்களை வைத்து அணுவுலைகளை நிர்மாணிக்கவேண்டும். அவர்களே மின்னுர்பத்தி செய்ய வேண்டும், மின்சாரத்தை மட்டும் பாகிஸ்தான் அரசுக்கு விற்க வேண்டும். இதுதான் முஷாரப் முன்வைத்த திட்டம்.

இந்திய அமெரிக்க பேச்சுவார்தையின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதா என்று தெரியவில்லை.ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சிக்கல் இல்லாத யோசனையாகவே படுகிறது.

இருக்கும் அணுவுலைகளை பிரிப்பது, யுரேனியம், எரிபொருள் மறுசுழற்சி, வெளிநாட்டு நிபுணர்களின் ஆய்வு, NSG நாடுகளை தாஜா செய்வது, IAEA வின் சிறப்பு ப்ரோடொகோல்கள் என்று எந்தச் சிக்கலும் இருக்காது. We could have thought about it or did we?

Friday, August 24, 2007

ராஜதந்திரி ரோனன் சென்

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்கட்சிகளும் இடதுசாரிகளும் தீவிரமாக எதிர்த்துக்கொண்டிருக்கும் போது, இதனை எதிர்பவர்களெல்லாம் "தலை இல்லாத முண்டம்" என்கிற ரீதியில் இந்திய தூதர் ரோனென் சென் கருத்து கூறியுள்ளார்.


பிஜேபி, சிபிஎம் என்று ஆளாளுக்கு அவரை பிடித்து எகிற ஆரம்பித்துளார்கள். இது எனக்கு நல்ல ராஜதந்திரமாகவே படுகிறது. இரண்டு வருடங்கள் பேசிப்பேசி போட்ட ஒப்பந்ததை குப்பையில் கடாச வேண்டும் என்ற இந்தக்கட்சிகளின் கோரிக்கை, இப்போது ரோனன் சென்னின் சீட்டைக்கிழிக்க வேண்டும் என்கிற அளவுக்கு இறங்கி வந்துள்ளது.

விவாத்ததை ஒரு உப்பு பெறாத விஷயத்தின் பக்கம் திருப்பிய ரோனென் சென் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை நல்ல ராஜதந்திரிகள் தான்.

Friday, June 08, 2007

பக்கத்து சீட்

"வேர் இஸ் டெஸ்க் நம்பர் 22?" என்று கேட்டபடி என் சீட்டுக்கருகில் வந்தாள் அவள், ஐடி பெண்ணுக்கே உரிய ஸ்வரூபத்தில், கையில் செல்ஃபோன், அதே கையில் சிறிய கைக்குட்டை, தோளில் டிசைனர் ஹேன்ட்பேக் , இன்னொரு கையில் டப்பர்வேரில் சாப்பாடு , கூடவே இன்னொரு ப்ளாஸ்டிக் கவர். மென்மையான நிறத்தில் சுடிதார், துப்பட்டா, தலையில் ஒரே ஒரு க்ளிப், கழுத்தில் தொங்கிய அட்டை அவள் பெயர் ஸ்வப்னா என்றது. ஸ்வப்னா குமாரசாமி.


இடத்தை காமித்துவிட்டு கம்ப்யூட்டர் பக்கம் திரும்பினேன். கடந்த மூன்று மாதங்களில் அந்த இடத்துக்கு வரும் நான்காவது நபர், முதலில் அங்கிருத்தவன் என் பழைய ப்ராஜெக்ட் சகா தீபாங்கர் தத்தா. அவன் வேறு வேலைக்கு சென்ற பிறகு, வந்த மற்ற இருவரும் என் வேலைக்கு சற்றும் தொடர்பில்லாதவர்கள். அவர்கள் பார்த்த வேலை என்ன என்று கூட தெரியாது.

"ப்ரின்டர் எங்கிருக்கிறது ?", "ட்ராயெர் சாவி எங்கே கிடைக்கும்?", போன்ற பொதுவியல் பேச்சுக்களை தவிர அவர்களிடம் எதுவும் பேசியதில்லை. பெரிய கம்பெனி என்றாலே இப்படித்தான் போலிருக்கு.

நான் முன்பிருந்த சிறிய நிறுவனத்தில் இப்படி இருந்ததில்லை. செக்யூரிட்டி கோதண்டம் சார் முதல் டீ கொண்டுவரும் சங்கர் வரை எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அன்யோன்யம் இருந்தது. வேலைக்கிடையே பூர்வ மீமாம்ஸம் முதல் பார்க்கிங் பிரச்சனை வரை காரசாரமாக பேசுவோம். இங்கு அப்படி இல்லை, ப்ராஜெக்ட் சகாக்களை தவிர மற்றையோரிடம் எதையும் அதிகமாக பேசியதில்லை.

தீபாங்கர் போனவுடனேயே அங்கு வந்தவன் ஒரே வாரத்தில் போய்விட்டான், அப்புறம் வந்தவளின் பெயர் ரஷ்மிதா. அவளைப்பற்றி சொல்வதென்றால், அவளும் இந்த ஸ்வப்னாவைபோல் க்ளிப் போட்டிருந்தாள். ஆவ்வப்போது க்ளிப்பை கழற்றி தலையை சிலுப்பி மீண்டும் க்ளிப்பை போட்டுக்கொள்வாள், தினமும் ஒரு முப்பது முறையாவது இதனை செய்வாள்.

அடிக்கடி செல்பேசுவாள். சில சமயம் குறைச்சலாக இரைச்சலின்றி, சில சமயம் நீண்ட நேரம். அப்படித்தான் ஒருநாள், அதிக நேரம் உட்கார்ந்துக்கொண்டு செல் பேசியபடி இருந்தாள். லேசாக விசும்புவது தெரிந்தது. பைக்குள் கையை விட்டு டிஷ்யூவால் கண்ணை துடைத்துக்கொண்டாள்.

சில வாரங்களுக்குப் பிறகு சென்று அவள் ஈ மெயிலில் திருமண அழைப்பிதழ் அனுப்பிக்கொண்டிருந்தாள். என்னை அழைக்கவில்லை. அதனால் என்ன. நான் பக்கத்து சீட்டுக்காரன் தானே. பக்கத்து வீட்டுக்காரனயே இப்போதெல்லாம் வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பதில்லை. மாடு கன்றுபோட்டால் கூட பெயர் வைத்து ஊரோடு கொண்டாடி மகிழ்ந்த தமிழ் சமூகம்!

ஆபீஸ் வேலையாய் இரு வாரங்கள் வெளிநாடு போய்வந்தேன், பக்கத்து சீட் காலி. இப்போது இந்த ஸ்வப்னா. இவள் இந்த சீட்டிலிருந்து கிளம்பும் முன்பாவது நான் கிளம்பிவிட வேண்டும்.

"ஹாய்" என்று குரல் கேட்டது , திரும்பினால், கையில் திருப்பதி லட்டுடன் ஸ்வப்னா. "லட்டூஸ் ஃப்ரம் திருப்பதி" என்றவள். திடீரென "டூ யூ ஸ்பீக் தமிழ் ?" என்றாள்.

"ம், நானும் தமிழ்தான் ,புதுசா சேந்துருக்கீங்களா?" என்றேன்.

"டூ வீக்ஸ் ஆச்சு, ஓரியென்டேஷன்ல இருந்தேன், இனிமேல் தான் ஒர்க் ஸ்டார்ட் பண்ணணும்" என்று தமிழில் சொன்னாள்.

"இதுக்கு முன்னாடி நான் சென்னைல ஒரு சின்ன கம்பெனில இருந்தேன், ஸிக்மா டெக்னோ சொல்யூஷன்ஸ், ரொம்ப சின்ன இடம், முப்பது பேர் தான்" என்றவள், "வேலை எல்லாம் நல்லாதான் இருந்துது, இருந்தாலும் இன் எ பிக் கம்பனி வீ கேன் கெட் லாட் ஆஃப் எக்ஸ்போஷர், அண்ட் மீட் அ லாட் ஆஃப் பீப்பிள், அதனால தான் இங்க சேர்ந்தேன்" என்றாள்.

"ம்ம்ம், இப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு அப்றமா பேசலாம், லட்டுக்கு தாங்க்ஸ்" என்று சொல்லி கிளம்பினேன்.

Thursday, May 24, 2007

விஜயகாந்தின் காமெடி

'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று இன்னும் முடிவு செய்யவில்லை' என்று விஜயகந்த் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் அவரிடம் இருப்பது ஒரே ஒரு ஓட்டு அதனை யாருக்கு போட்டால் என்ன , இல்லை போடாவிட்டால் தான் என்ன! ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படுபவர்கள் வரிசையில் நின்று இவர்டம் ஆதரவு கேட்பது போலவும் , இவர் யோசித்து சொல்கிறேன் என்பது போலவும் பில்டப் கொடுப்பது , டூ மச்.


சினிமாவில் தனியொரு ஆளாக காஷ்மீர் வரை சென்று, பஞ்ச் டயலாக் பேசியபடியே பயங்கரவாதிகளை பந்தாடுவது மாதிரி ஜனாதிபதி தேர்தலையும் நினைத்துவிட்டார் போல.

ஒரு கதை நியாபகம் வருகிறது. மதுரை திருமலை நாயக்கர் மஹால் வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் பேசிக்கொண்டார்களாம்..

பிச்சை 1 : இந்த வருஷம் எப்படியாவது திருமலை நாயக்கர் மஹாலை வாங்கிடுவேன்.

பிச்சை 2 : உன்னால் முடியாது, நான் விற்பதாக இல்லை.

"ஜனாதிபதி தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? " என்கிற அபத்த கேள்வியை பேட்டியில் விஜயகாந்திடம் கேட்ட நிருபரை கண்டு காலில் விழுந்து வணங்க வேண்டும்.

Tuesday, April 03, 2007

இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் என்ன வித்தியாசம்?

சின்ன வயசுல எனக்கு இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் வித்தியாசம் என்னன்னு தெரியாது, அப்பறம் ஓரளவு ஞானம் வந்ததும் புரிய ஆரம்பிச்சுது. ஆனா பாருங்க என்னுடைய புரிதல் தப்புன்னு இப்பதான் தெரிஞ்சுது. இந்த படத்த பாருங்க.







இவரோட பேரு டேவிட் கேமரூன், ப்ரிட்டிஷ் கன்ஸர்வேட்டிவ் கட்சி தலைவர், இவ்வளவு நாள் வலதுசாரியா இருந்த கட்சிய திடீர்னு இடதுசாரியா மாத்திட்டாரு, எப்படின்னு கேக்கறீங்களா, இந்த போட்டோவையும் பாருங்க.





Tuesday, February 27, 2007

டிஜிட்டல் கேமராவும் டூரிஸ்டுகளும்

டிஸ்கி 1- இந்த பதிவு படமெடுப்பத்தை நல்ல பொழுதுபோக்காக கொண்டிருப்பவர்களையோ, அல்லது படமெடுப்பதில் ஆத்ம த்ருப்தி அடைபவர்களையோ கருத்திற்கொண்டு இடப்பட்டதல்ல.

டிஸ்கி 2- தலைப்பு தமிழில் இல்லாததால் இந்த பதிவிற்கு வரிவிலக்கு கிடையாது


குழுவாக சுற்றுலாசெல்லும் போது கண்ணால் காண்பதையெல்லாம் கேமெராவில் சுடும் அன்பர்களே,

நீங்கள் வைத்திருப்பதோ டிஜிட்டல் கேமரா, படம் எடுப்பதோ கட்டடத்தை, யாராவது ஒருவர் படமெடுத்தால் போதுமே ! பிறகு படங்களை மின்மடல் மூலமாகவோ ஃபோட்டோ ஷேரிங் மூலமாகவோ பரிமாறிக்கொள்ளலாமே!

அவ்வளவு ஏன், வரலாற்று முக்கியத்துவம் அல்லது முக்கிய சுற்றுலாத்தலங்களின் படங்கள் ஏற்கனவே அனேக முறை படமேடுத்தாயிற்று, பல படங்கள் இணையத்தில் இருக்கும், ஓசியில் கிடைக்கும், கூகிளாண்டவரின் அருளுடன் அவற்றைப்பெறலாம்.

ஆகவே கட்டங்களையோ மரம் செடி கொடிகளையோ படம் எடுப்பது வேஸ்ட்!

அதனினும் வேஸ்ட் பலபேர் டிஜிட்டல் கேமராவில் அவற்றை படமெடுப்பது.

படமெடுப்பது வேஸ்டெனில் கேமரா எதற்கு? நம் கையில் கேமரா இருப்பது மனிதர்களை படமெடுக்கவே, உடன் வரும் நண்பர்களையும் அன்பர்களையும் படமெடுத்தாலே போதும் என்பது இந்தச்சிறியோனின் அபிப்பிராயம்

நம்மை நிறைய படமெடுத்துக்கொள்வதிலும் ஏகப்பட்ட தர்மசங்கடங்கள் உண்டு, குறிப்பாக மென்படங்களை எவ்வளவு பிரதிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம் எனபதாலும் , அதனை வைத்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்யலாம் என்பதாலும் சற்று கவனம் தேவை.

பொதுவாக எனக்கு அவ்வளவாக் படமெடுத்துக்கொள்வது பிடிக்காது, அதனாலேயே இந்திவிற்க்கு வெளியே பல இடங்களிலும் இந்தியாவில் சில இடங்களிலும் நிலவும் CCTV பொருத்தும் போக்கை வெறுக்கிறேன், CCTV கேமராக்களை கண்ட இடங்களில் பொருத்துவதை எதிர்த்து போராட வேண்டும்.

பாதுகாப்புக்காரணங்கள் சொல்லப்பட்டாலும் , அவை ஏற்ப்புடையவை என்றாலும் சீக்கிரமே இதற்கு மாற்று கண்டுபிடிப்பது நலம். குறைந்தபட்சம் CCTV பொருத்துவதற்கான வரன்முறைகள், எவ்வளவு நாட்கள் படங்களை வைத்திருக்கலாம், படங்களின் சேமிப்பிற்க்கு தேவையான பாதுகாப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தவேண்டும். இதனை அரசாங்கம் செய்யாமல் IEEE, ISO போன்ற தொழில்முறை குழுக்கள் வரையறுக்கலாம்.

Wednesday, February 07, 2007

சவுதாம்டனில் பிடித்த ஏழரை

வேலைக்காக வெளிநாட்டுப்பயணம் இந்த முரை ஐக்கிய ராஜ்ஜியத்தின் சவுதாம்டன் நகர். இந்தியாவிலிருந்து லன்டன் வரை ஜெட் ஏர்வேஸில் சொகுசு பயணம். லன்டனிலிருந்து டாக்ஸி.

சவுதாம்டன் வந்ததும் பிடித்தது சனி.
ஹோட்டல் அறையை முன்பதிவு செய்துவிட்டு வாடகைக்கு முன்பணம் கொடுக்க கம்பனி மறந்தால் அந்தப்பணத்தை நான் கட்டினேன். சமயம் பார்த்து கார்பரேட் கார்ட் மக்கர் செய்தது ஏடிஎம்மில் காசு எடுக்க முடியவில்லை, என் தனிப்பட்ட வங்கி கணக்கின் டெபிட் கார்ட் வேலை செய்ததால் பிழைத்தேன்.

அடுத்த நாள் கம்பனி நிர்வாகத்தை ஒரு பிடி பிடித்தபின் நிலைமை சீரடைந்தது. அடுத்த நாள் இந்தியாவிலிருந்து வரும் இன்னொரு நாபரிடம் பணம் தருவதாக சொன்னார்கள். அவர் பணத்தை பெட்டியில் வைத்து Check in செய்துவிட்டார். பெட்டியோ லன்டனில் கைக்கு வரவில்லை. அவருக்கும் சேர்த்து வடகையை செலுத்த வேண்டிய நிலைமை வந்தது. ஒருவழியாக 36 மணி நேரத்திற்க்குப்பின் பெட்டி கைக்கு வந்தது. கார்பரேட் கார்டும் வேலை செய்தது. சுபம்.

அலுவல் ரீதியாக குறைந்த காலத்திற்கு வெளிநாடு செல்பவர்கள் கம்பனி தரும் அந்நிய செலாவணி தவிர கொஞ்சமாவது சொந்தமாக அந்நிய செலாவணியைத் (கரன்ஸியாக) வாங்கிக்கொள்ளவும் . எங்கும் அலையவேண்டியது இல்லை. ஏர்போட்டிலேயே கிடைக்கும்.
சொந்தப்பெயரில் சர்வதேச கிரெடிட் (அதிக அளவு லிமிட்டுடன்) மற்றும் டெபிட் கார்டுகளை எடுத்துச்செல்லவும்.ஹோட்டல் வாடகை மற்றும் டாக்ஸிக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும். இல்லை அதற்க்கும் சேர்த்து அட்வான்ஸ் வாங்கவும். குறிப்பாக பணத்தை பெட்டியில் வைக்காதீர்கள். கொஞ்சம் லோ டெக் காக தெரிந்தாலும் பணத்தை கரன்ஸியாகவோ, ட்ராவல்லெர்ஸ் செக்காகவோ எடுத்துச்செல்லவும். ஏனென்றால் ட்ராவல் கார்ட் போன்ற அஃறிணைப்பொருட்கள் சமயம் பார்த்து கழுத்தறுக்ககூடியவை என்பதை அனுபவதில் கண்டேன்.

Tuesday, January 16, 2007

பெரிய திருமொழி - தமிழாக்கம் (?!)

பெரிய திருமொழி உரையும் தமிழாக்கமும் என்ற நூலின் தலைப்பில் சொற்குற்றம் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு விஷயம் தான் இடிக்கிறது, திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியை தமிழில் தான் இயற்றியுள்ளார். மேற்படி நூல் 30வது சென்னை புத்தக கண்காட்சியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ஸ்டாலில் உள்ளது. அட்டையை பார்த்தால் ஏதோ தீஸீஸ் போல இருந்தது.

என்னத்த தமிழாராய்ச்சிப் பண்ணி என்னத்த...


வழக்கம் போல இந்த ஆண்டும் எந்த புத்தகம் வாங்காமல், வெறுங்கை வீசுபவர்களை நிரம்பக்காணமுடிந்தது. டெக்னிகல் புத்தகங்களை விற்கும் நிலையங்களில் கூட்டம் அலைமோதிற்று. வாஸ்து, சோதிடம், சமையல் புத்தகங்கள் இந்த ஆண்டும் வசூலில் பட்டையை கிளப்பும் என்பதென் அசைக்க முடியாத நம்பிக்கை.
புத்தக கண்காட்ச்சியைப்பற்றி என் நண்பன் தீபக் எழுதியத்தை படிக்கவும்.

Wednesday, January 10, 2007

உபி தேர்தல் முன்னோட்டம்

அஜீத் சிங் , அகில இந்திய ஆயாராம் காயாராம் அரசியலில் ஒரு முக்கிய புள்ளி, அந்தர் பல்டி அடித்து கூட்டணி மாறுவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.
தற்போது உபி தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் தன் கூட்டணி வாய்ப்புகளை திறந்து வைக்க முலாயாம் அமைச்சரவைலிருந்து தன் கட்சி அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்.விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கரும்பு விலையை அதிகரிக்கக்கோரி ராஜினாமா என்று கிச்சு கிச்சு மூட்டியுள்ளார்.
மறைந்த சரண் சிங்கின் மகன் என்ற ஒரே தகுதியுடன் இவர் அரசியல் நடத்துகிறார். வி பி சிங்க்கின் ஜனதா தளம் தொடங்கி, சந்திர சேகர் , நரசிம்ம ராவ், தேவ கவுடா, என்று பல மத்திய அமைச்சரவைகளில் அங்கம் வகித்து பதவி பெற்றார்.
பின்பு மாயாவதி , முலாயம் ஆகியோரிடம் மாறி மாறி தன் கட்சியை அடகு வைத்து அமைச்சர் பதவியை பெற்றார். இந்த தேர்தலில் முலாயம் தேருவது கடினம் என்று பரவலாக நம்பப்படுவதால் கூட்டணியிலிருந்து கழண்டுகொள்ள முதல் படியாக கரும்பு விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறார். வாழ்க.