Saturday, January 23, 2010

IPL பவுன்சர்

ஐபிஎல் ஏலம் பாகிஸ்தானில் ஏகப்பட்ட பீலிங்ஸை கிளப்பி விட்டிருக்கிறது. அந்த நாட்டில் பலரும் நம்மூரில் சில பேரும் செம கடுப்பில் இருக்கிறார்கள். வியாபாரத்தையும் தேச பக்தியையும் நம்மாட்களும் பாகிஸ்தானியர்களும் போட்டு குழப்பி வருகிறர்கள்.
இதேபோல டாடா ஜாகுவாரை வங்கினாலும் மிட்டல் ஆர்செலரை வாங்கினாலும் தேவயற்ற தேசபக்தி டேகை ஒட்டிவிடுகிறர்கள்.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் பல கருத்துக்கள் பேத்தலாக உள்ளது.

1. யாரும் ஏலம் எடுக்கப்போவதில்லை என்று தெரிந்திருந்தால் ஏலம் விடாமலேயே இருந்திருக்கலாம். என்று ஒரு வாதம். அப்படி செய்திருந்தால் என்னவாகீருக்கும். இப்போது புலம்புபவர்கள்
'ஐயையோ! ஏலத்தில் பாக் விரர்களை சேர்க்கவில்லயே, நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பை தடுக்கிறார்களே' என்று வேறு விதமான ஒப்பாரி வைத்திருப்பார்கள்.

2. என்ன இருந்தாலும் உலக சாம்பியன், யாரையும் ஏலம் எடுக்காதது தப்பு.
இன்றைய கால்பந்து (காற்பந்து ?) உலக சாம்பியன் இத்தாலி, எத்தனை இத்தாலிய வீரர்கள் இப்போது EPLல் விளையாடுகிறர்கள்?

இறுதியாக பாகிஸ்தான் வீரர்களை நெதட்லாந்து, கானடா நாட்டு வீரர்களுடன் ஒப்பிட்டு கானடா மற்றும் நெதர்லாந்திற்கு களங்கம் ஏற்ப்படுத்தும் லலித் மோடியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

சொல்வதற்கு மேலும் சில கருத்துக்கள்(!) இருந்தாலும் சனிக்கிழமை அன்று இவ்வளவு சுறுசுறுப்பு கூடாது என்பதால் அப்பீட்டாகிறேன்.

Wednesday, January 06, 2010

சென்று கொடு வென்று விடு

சென்ற வருடம் பதிவு எதுவும் எழுதாமல் சாவியானேன், இந்த வருடமாவது இயன்ற வரை எழுத வேண்டும்.


கடந்த வார இறுதியில் கைய்யில் தட்டுபட்ட ஒரு நூலை படிக்கத்துவஙினேன். அதில் வரும் சில அரிய கருத்துக்கள்.



*எந்த வேலையை செய்தாலும் பலனை எதிர்பாராமல் ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும்.
*நம் செயல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
*நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம்.

மேற்படி கர்ம யோக மேட்டர்களை பொதுவாக நாம் கீதைபேருரைகளில் படித்திருப்போம். அல்லது கேட்டிருப்போம்.
கர்ம யோகத்தைப் பற்றியும், நிஷ்காம கர்மத்தையும் அலுவலக் சூழலில் பொருத்தி புனையப்பட்ட ஒரு நிர்வாகவியல் கதை "GO GIVER" புத்தகம்.

பொதுவாக மேலாண்மை நூல்களையும் சுய முன்னேற்ற நூல்களையும் நான் படிப்பதில்லை.

வேண்டா வெறுப்பாக இந்த நூலைப்படிக்க துவங்கினேன். ஒவ்வொரு அத்தியாயமும் கீதை தத்துவங்களையே சொல்வதால் பின்குறிப்பில் ஏதாவது இருக்குமா என்று பார்த்தேன். ம்ஹும்ம்.

எப்படியோ மீண்டும் கீதையை புரட்ட வைத்த நூலாசிரியர்களுக்கு நன்றி.

Friday, October 03, 2008

வண்டி எண் 103

"வண்டி எண் 103 தாம்பரம் விழுப்புரம் வழியாக புதுச்சேரி செல்லும் துரித பாசஞ்சர் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது நடைமேடைக்கு வந்து செல்லும்" என்று கரகரத்த குரலில் வரும் அறிவிப்பைக்கேட்டு வேகமாக நடைமேடை நான்கை நோக்கிச்சென்றால். அங்கு நிதானமாக வரும் WDM 3d ERODE முன்னால் இழுத்துவர பின்னால் 9 பெட்டிகள் கொண்ட வண்டி தெரியும்.

வண்டியில் ஏறி இடம் பிடித்து உட்காருவது பெரும்பாலும் பிரச்சனை இல்லை, முகூர்த்த நாட்கள் ,மேல்மருவத்தூர் திருவிழா போன்ற சமயங்களில் மட்டும் கூட்டம் கொஞ்சம் இருக்கும்.

மகேந்திரா சிட்டி ஐ.டி மக்கள், மறைமலை நகர் தொழிலாளர்கள், SRM மாணவர்கள், வங்கி ஊழியர்கள், சென்னையில் குடித்தனம் இருந்து வெளியூர் பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்கள் என்று வண்டி முழுவதும் சீசன் டிக்கட் கூட்டம் தான் இருக்கும்.

அவ்வப்போது செவ்வாடை அணிந்த மேல்மருவத்தூர் பக்தர்களும் வருவார்கள்.

காலை 6 30 க்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு 10:50க்கு புதுவை செல்லும். காலை வேளைகளில் கில்லி மாதிரி டைமுக்கு வந்துவிடும் ஆனால் மாலையில் மெகா சொதப்பலாக வரும் அபகீர்த்தி இந்த வண்டிக்கு உண்டு.

வேகமென்றால் வேகம் அப்படி ஒரு வேகம். கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு சுமார் 11 நிமிடத்தில் சென்றுவிடும். குளிர் காலங்களில் மூடுபனியைக் கிழித்துக்கொண்டு செல்லும் அழகை இந்தப்படத்தைப் பார்த்தாலே தெரியும்.




மற்ற வண்டிகளைப்போல அதிகம் வியாபாரிகளைக் காண முடியாது, ஒரே ஒரு சுண்டல்காரர் மட்டும் விடாமல் வருகிறார்.

ரெயில்வே நிர்வாகம் இந்த வண்டியை இயக்கும் விதமே அலாதியனது. இன்னதுதான் என்றில்லாமல் பல வித என்ஞின்களை பொருத்துவார்கள். ஆரம்பத்தில் ஈரோடு WDM3d, பிறகு டிசல் தட்டுப்பாடு ஏற்ப்பட்ட பிறகு WAP-4 Arakkonam எஞ்ஜினும் போட்டார்கள் , பிறகு என்ன ஆனதோ, பலவிதமான எலெக்ட்ரிக் எஞ்ஜின்களை பொருத்துகிறார்கள், WAG7 போன்றவை, ஒரு முறை துக்ளகாபாத் எஞ்ஜினைக்கூட பொருத்தினார்கள். இது போதாதென்று ICFல் ரிப்பேர் செய்யப்படும் ரெயில் பெட்டிகளை இந்த வண்டியில் இணைத்து சோதனை ஓட்டம் விடுவார்கள்.

பல நாட்கள் இந்த ரெயிலில் பயணம் செய்திருக்கிறேன், இப்போது புதிய வேலையில் சேர்ந்திருப்பதால் 103 ல் போகவேண்டிய தேவை இல்லை. I miss it.

Monday, September 01, 2008

மின் காந்த அடுப்பு (Induction Stove)


சமீப காலங்களாக , வட்டார பத்திரிக்கைகள்,மின்சார ரயிலிலும் , மாநகர பேருந்துகளிலும் ஒட்டப்படும் விளாம்பரஙள் ஆகியவற்றில் வியாபித்திருப்பது மின்காந்த அடுப்புதான் (Induction Stove).


AC மின்சாரத்தின் நடுவே காந்த உணர்ச்சிக்கு உள்ளாகும் இரும்பு போன்ற உலோகங்களை வைப்பதால் உருவாகும் எட்டி கரண்ட் மூலம் உணவுப்பண்டங்களை சூடாக்குகிறது.
இந்த அடுப்பில் இரும்பு மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களை (Ferro or ferri magnetic)மட்டுமே வைத்து சமைக்க இயலும்.

குறைந்த அளவு மின்சார செலவில் (ஒரு மணிநேரத்திற்கு முக்கால் யூனிட்) சமையல் செய்யலாம். மின்குக்கர், மைக்ரோவேவ் போன்று மூடிய நிலையில் இல்லாமல் , திறந்த அடுப்பு என்பதால் நம்மூர் சமையலுக்கு மிகவும் ஏற்றது.

1700 முதல் 3500 ரூபாய் வரை பல வித வடிவங்களில் கிடைக்கிறது.
ஆரம்பத்தில் சில கடைகளிலிலும், பொருட்காட்சிகளிலும் மட்டுமே காணப்பட்டாலும் இன்று பெரும்பாலான பாத்திரக்கடைகளில் கிடைக்கிறது.

இவ்வளவு நல்லவிஷயங்கள் இருந்தாலும் இன்னும் விடியோகான், எல் ஜி, போன்ற பெரிய பிராண்டுகள் இதன் உற்பத்தியை துவக்கவில்லை. பெரும்பாலும் உப்புமா பிராண்டுகளே உள்ளன. எப்படி நம்பி வாங்குவது? இந்த அடுப்புக்களை விற்கும் ஒரு பிரதிநிதியை கேட்டபொழுது "மாசத்துக்கு 70 பீஸ் போவுது சார்" என்றார்.

கேஸ் தொல்லை பெரும் தொல்லையாக இருப்பதால் கண்டிப்பாக ஒன்று வாங்கியாக வேண்டும்.

Monday, August 11, 2008

ரஷ்யா ஜார்ஜியா போர்- இந்திய அரசு அதிரடி முடிவு!!

கடந்த சில நாட்களாக ரஷ்யா ஜார்ஜியா நாடுகளுக்கிடையே தென் ஓஷேஷிய பகுதி தொடர்பாக போர் நடப்பது தெரியும்.

நானும் எவ்வளவோ தேடிப்பார்த்துவிட்டேன், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுரவுத்துறை எந்த கருத்தையுமே சொல்லவில்லையே ஏன்?

சில வருடங்களுக்கு முன்பு உலகத்தில் நடக்கும் அத்தனை விவகாரங்களுக்கும் பஞ்ச் டயலாக் சொல்லும் க.கந்தசாமியாக விளங்கிய இந்திய வெளியுரவுத்துறை இப்போதெல்லாம் மவுனம் சாதிக்கிறது, இல்லையென்றால் 'பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும்' என்பது போன்ற வழவழா கருத்தை சொல்லுகிறது.

நம்மால் ஒன்று கையால் ஆகாது பிறகு வாய்ச்சவடால் மட்டும் எதற்கு என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டார்களோ? உண்மை அதுவெனில் மிக்க மகிழ்ச்சி.

'நம்ம வழியை நாம பாத்துப்போம் , நமக்கு என் ஊர் நாட்டமை' என்று நினைத்தால் நாட்டிற்கு நல்லது.