Thursday, April 15, 2010

TV துளிகள்


SS Music இல் கடும் காம்பியர் பஞ்சம். கிட்டத்தட்ட எல்லா நிகழ்சிகளிலும் பலோமா ஒண்டி ஆளாக ஊடு கட்டுகிறார். அவ்வபோது பூஜா தலைகாட்டுகிறார். பலோமா கேமரா கோணத்தை கூட மாறாமல் விதவிதமாக உடை(!)களை மட்டும் மாற்றி நிகழ்சிகளை வழங்குகிறார். கேமராமேன் கூட படப்பிடிப்பு ஆரம்பித்ததும் கேமராவை நிலைபெறச்செய்து விட்டு "பாப்பா நீயே ஷோ முடிஞ்சதும்கேமராவை ஆஃப் பண்ணிடு" என்று வீட்டுக்கு கிளம்பிவிடுவார் போலிருக்கிறது.



-----

NDTV HINDU வில் கேமரா பஞ்சம். ஸ்டுடியோவில் யாரையாவது வைத்து பேட்டி எடுக்கும் போது கேமரா உரையாடும் இருவரில் ஒருவரை மட்டுமே காட்டுகிறது. சேனல் மாற்றி வரும் போது என்ன மேட்டர் என்று தெரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.

----

NDTV HINDU தமிழ் செய்திகளில் காரம் அதிகம். தெகிரியமாக மாநில அரசை தாக்குகிறர்கள். எவ்வளவு தூரம் போகிறது என்று பார்க்கலாம்.

---

IPL ல்விளம்பர வெறி ரொம்பவே ஜாஸ்தியாக உள்ளது. சிக்ஸ் அடித்தால் DLF மேக்ஸிமம் என்றும், கார்பன் கமால் கேச் என்று ஒவ்வொரு பததிற்குள்ளும் ஒரு விளம்பர இடைச்செருகலை செய்கிறர்கள். ஸ்ஸப்பஆஆ

----

காமெடி நிகழ்சிகளை விட சசிதரூர் லலித்மோடி யுத்தம் தமாஷாக இருக்கிறது. எவ்வளவு டீப்பா போறங்க, விட்டா நாலஞ்சு தலைமுறையை தோண்டி எடுப்பாங்க போலருக்கு. என்னைப் பொருத்தவரையில் லலித்மொடியை வெளியுறவு அமைச்சராக போடலாம். சசிதரூர் போன்ற போலி லிபரல் அரைக்கிறுக்கர்களை விட லலித் மோடி போன்ற தடாலடிப் பேர்வழிகள் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர்கள்.

Wednesday, March 03, 2010

கதம்பம்


கீழே கருங்கல் தளம்.

மேலே கருங்கற்கள் பலகைகளாக வைக்கப்பட்ட கூரை.

கூரையை தாங்கிப்பிடிக்க கருங்கல் தூண்.

குறுக்குவாகாக கருங்கல் தூலம்

தூணில் செதுக்கப்பட்ட யாளி

யாளியின் அடியில் துதிக்கை கொண்டு ஏசலாடும் யானை.

யாளி மீது பாகன்.

பாகன் கையில் அங்குசம்.

அங்குசம் கண்டு மிரளும் யாழியின் கண்கள்

இவ்வளவும் தேவை ஒரு டியூப் லைட் மாட்ட

*********

ரின் -டைட் விளம்பர யுத்தம் காண சகிக்கவில்லை. இந்த FMCG நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கொடுக்கும் பில்ட் அப் இருக்கிறதே அடேயப்பா.

சர்வ சாதாரணமான சமாச்சாரங்களான சலவை சோப், பவுடர் இவர்கள் நொபல் விஞ்ஞானிகளை கொண்டு தயாரித்தது போன்ற பிம்பத்த நிறுவ முயன்றாலும் அது பல சமயங்களில் படுதோல்வியில் முடிகிறது.

குறிப்பாக பற்பசை மற்றும் டூத் பிரஷ் போன்றவைகளை என்னவோ ராக்கெட் தொழில் நுட்பம் கொண்டு தயாரித்தது போல் காண்பிப்பார்கள்.

*********

பண்டைய தத்துவங்களையும் நவீன சிந்தனைகளையும் கலந்து பேல்பூரியாகத்தரும் நியூ ஏஜ் சாமியார்களைக்கண்டால் எனக்கு அறவே ஆகாது. செஷனுக்கு இவ்வளவு என்று மீட்டர் போட்டு அமவுண்டு கறக்கும் யாரையும் தத்துவ ஞானியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பேர்பட்டவர்களின் பின்னால் சமூகத்தில் நல்ல ஸ்திதியில் உள்ள பலர் அணிவகுப்பது ஆச்சர்யம்.

இடது கன்னத்திற்கு ஒருவர், வலது கன்னத்திற்கு ஒருவர் என்று ஷேவிங் செய்வத்தில் கூட ஸ்பெஷலிஸ்டுகள் வந்துவிட்ட காலமிது. ஆனால் மேற்படி நியு ஏஜ் குருமார்கள் யோக கற்பிப்பது, பத்திரிக்கைக்கு பத்தி எழுதுவது, CEO க்களுக்கு அட்வைஸ் செய்வது , உலக அமைதியை ஏற்படுத்துவது , ஆஸ்பத்திரி நடத்துவது என்று சகலத்தையும் செய்கிறார்கள். பலர் சிலகாலம் ஆட்டத்தில் இருந்து கல்லா கட்டியவுடன் ஃபீல்ட் அவுட் ஆகிறார்கள். ஆட்டத்தில் தொடருபவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.

Saturday, January 23, 2010

IPL பவுன்சர்

ஐபிஎல் ஏலம் பாகிஸ்தானில் ஏகப்பட்ட பீலிங்ஸை கிளப்பி விட்டிருக்கிறது. அந்த நாட்டில் பலரும் நம்மூரில் சில பேரும் செம கடுப்பில் இருக்கிறார்கள். வியாபாரத்தையும் தேச பக்தியையும் நம்மாட்களும் பாகிஸ்தானியர்களும் போட்டு குழப்பி வருகிறர்கள்.
இதேபோல டாடா ஜாகுவாரை வங்கினாலும் மிட்டல் ஆர்செலரை வாங்கினாலும் தேவயற்ற தேசபக்தி டேகை ஒட்டிவிடுகிறர்கள்.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் பல கருத்துக்கள் பேத்தலாக உள்ளது.

1. யாரும் ஏலம் எடுக்கப்போவதில்லை என்று தெரிந்திருந்தால் ஏலம் விடாமலேயே இருந்திருக்கலாம். என்று ஒரு வாதம். அப்படி செய்திருந்தால் என்னவாகீருக்கும். இப்போது புலம்புபவர்கள்
'ஐயையோ! ஏலத்தில் பாக் விரர்களை சேர்க்கவில்லயே, நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பை தடுக்கிறார்களே' என்று வேறு விதமான ஒப்பாரி வைத்திருப்பார்கள்.

2. என்ன இருந்தாலும் உலக சாம்பியன், யாரையும் ஏலம் எடுக்காதது தப்பு.
இன்றைய கால்பந்து (காற்பந்து ?) உலக சாம்பியன் இத்தாலி, எத்தனை இத்தாலிய வீரர்கள் இப்போது EPLல் விளையாடுகிறர்கள்?

இறுதியாக பாகிஸ்தான் வீரர்களை நெதட்லாந்து, கானடா நாட்டு வீரர்களுடன் ஒப்பிட்டு கானடா மற்றும் நெதர்லாந்திற்கு களங்கம் ஏற்ப்படுத்தும் லலித் மோடியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

சொல்வதற்கு மேலும் சில கருத்துக்கள்(!) இருந்தாலும் சனிக்கிழமை அன்று இவ்வளவு சுறுசுறுப்பு கூடாது என்பதால் அப்பீட்டாகிறேன்.

Wednesday, January 06, 2010

சென்று கொடு வென்று விடு

சென்ற வருடம் பதிவு எதுவும் எழுதாமல் சாவியானேன், இந்த வருடமாவது இயன்ற வரை எழுத வேண்டும்.


கடந்த வார இறுதியில் கைய்யில் தட்டுபட்ட ஒரு நூலை படிக்கத்துவஙினேன். அதில் வரும் சில அரிய கருத்துக்கள்.



*எந்த வேலையை செய்தாலும் பலனை எதிர்பாராமல் ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும்.
*நம் செயல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
*நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம்.

மேற்படி கர்ம யோக மேட்டர்களை பொதுவாக நாம் கீதைபேருரைகளில் படித்திருப்போம். அல்லது கேட்டிருப்போம்.
கர்ம யோகத்தைப் பற்றியும், நிஷ்காம கர்மத்தையும் அலுவலக் சூழலில் பொருத்தி புனையப்பட்ட ஒரு நிர்வாகவியல் கதை "GO GIVER" புத்தகம்.

பொதுவாக மேலாண்மை நூல்களையும் சுய முன்னேற்ற நூல்களையும் நான் படிப்பதில்லை.

வேண்டா வெறுப்பாக இந்த நூலைப்படிக்க துவங்கினேன். ஒவ்வொரு அத்தியாயமும் கீதை தத்துவங்களையே சொல்வதால் பின்குறிப்பில் ஏதாவது இருக்குமா என்று பார்த்தேன். ம்ஹும்ம்.

எப்படியோ மீண்டும் கீதையை புரட்ட வைத்த நூலாசிரியர்களுக்கு நன்றி.

Friday, October 03, 2008

வண்டி எண் 103

"வண்டி எண் 103 தாம்பரம் விழுப்புரம் வழியாக புதுச்சேரி செல்லும் துரித பாசஞ்சர் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது நடைமேடைக்கு வந்து செல்லும்" என்று கரகரத்த குரலில் வரும் அறிவிப்பைக்கேட்டு வேகமாக நடைமேடை நான்கை நோக்கிச்சென்றால். அங்கு நிதானமாக வரும் WDM 3d ERODE முன்னால் இழுத்துவர பின்னால் 9 பெட்டிகள் கொண்ட வண்டி தெரியும்.

வண்டியில் ஏறி இடம் பிடித்து உட்காருவது பெரும்பாலும் பிரச்சனை இல்லை, முகூர்த்த நாட்கள் ,மேல்மருவத்தூர் திருவிழா போன்ற சமயங்களில் மட்டும் கூட்டம் கொஞ்சம் இருக்கும்.

மகேந்திரா சிட்டி ஐ.டி மக்கள், மறைமலை நகர் தொழிலாளர்கள், SRM மாணவர்கள், வங்கி ஊழியர்கள், சென்னையில் குடித்தனம் இருந்து வெளியூர் பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்கள் என்று வண்டி முழுவதும் சீசன் டிக்கட் கூட்டம் தான் இருக்கும்.

அவ்வப்போது செவ்வாடை அணிந்த மேல்மருவத்தூர் பக்தர்களும் வருவார்கள்.

காலை 6 30 க்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு 10:50க்கு புதுவை செல்லும். காலை வேளைகளில் கில்லி மாதிரி டைமுக்கு வந்துவிடும் ஆனால் மாலையில் மெகா சொதப்பலாக வரும் அபகீர்த்தி இந்த வண்டிக்கு உண்டு.

வேகமென்றால் வேகம் அப்படி ஒரு வேகம். கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு சுமார் 11 நிமிடத்தில் சென்றுவிடும். குளிர் காலங்களில் மூடுபனியைக் கிழித்துக்கொண்டு செல்லும் அழகை இந்தப்படத்தைப் பார்த்தாலே தெரியும்.




மற்ற வண்டிகளைப்போல அதிகம் வியாபாரிகளைக் காண முடியாது, ஒரே ஒரு சுண்டல்காரர் மட்டும் விடாமல் வருகிறார்.

ரெயில்வே நிர்வாகம் இந்த வண்டியை இயக்கும் விதமே அலாதியனது. இன்னதுதான் என்றில்லாமல் பல வித என்ஞின்களை பொருத்துவார்கள். ஆரம்பத்தில் ஈரோடு WDM3d, பிறகு டிசல் தட்டுப்பாடு ஏற்ப்பட்ட பிறகு WAP-4 Arakkonam எஞ்ஜினும் போட்டார்கள் , பிறகு என்ன ஆனதோ, பலவிதமான எலெக்ட்ரிக் எஞ்ஜின்களை பொருத்துகிறார்கள், WAG7 போன்றவை, ஒரு முறை துக்ளகாபாத் எஞ்ஜினைக்கூட பொருத்தினார்கள். இது போதாதென்று ICFல் ரிப்பேர் செய்யப்படும் ரெயில் பெட்டிகளை இந்த வண்டியில் இணைத்து சோதனை ஓட்டம் விடுவார்கள்.

பல நாட்கள் இந்த ரெயிலில் பயணம் செய்திருக்கிறேன், இப்போது புதிய வேலையில் சேர்ந்திருப்பதால் 103 ல் போகவேண்டிய தேவை இல்லை. I miss it.