Showing posts with label Mini Farm. Show all posts
Showing posts with label Mini Farm. Show all posts

Friday, January 16, 2015

துணிக்கடை பைகளில் காய்கறி வளர்ப்பு

துணிக்கடைகளில் நமக்கு கிடைக்கும் கட்டைப்பைகள், பெரிய நைலான் பைகள் போன்றவற்றை என்ன செய்வது என்று தெரியாமல், துக்கிப்போடவும் மனமில்லாமல் அப்படியே சேமித்து வைத்திருப்போம்.

இப்படி  வீணாகச்  சேரும் பைகளை நாம் மாடித்தோட்டதில் காய்கறி வளர்க்க பயன்படுத்தலாம்.

மாடித்தோட்டங்களில் மண் தொட்டிகளுக்கு பதிலாக grow bags என்னும் வளர்ப்பு பைகளை பயன்படுத்துவது அதிகமாகியுள்ளது, இவை  பெரும்பாலும் நைலான் அல்லது polypropelene போன்ற நெகிழி பொருட்களால் செய்யப்பட்டவை, சராசரியாக 50 ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது.

துணிக்கடைகளில் நமக்கு தரப்படும் பைகள் polypropelene ஆல் செய்யப்பட்டவை, நாம் இதனையே  grow bags ஆக பயன்படுத்தலாம்.


1. முதலில் பையை உள்ளிருந்து வெளியாக திருப்பிக்கொள்ள வெண்டும்/
2. அடிப்பகுதி தட்டையாக இல்லாவிடில் அவ்வறு வரும்படி மடித்து தைக்க வேண்டும்.
3. அடிப்பகுதியில் உலர்ந்த இலைகள், குச்சி, அல்லது coco peat போன்றவற்றை இட்டு  நிரப்ப வேண்டும்
4. இதற்குமேல், மண் ,மற்றும் மண்புழு கழிவு அல்லது மட்கியுரம் கொண்டு மேல் வரை  நிரப்ப வேண்டும்
5. அனைத்து பக்கங்களிலும், மேலிருந்து கீழ் வரை (2 mm அளவுக்கு)
சிறுதுளைகளையிட வேண்டும்.

துணிக்கடை grow bag தயார் .


நேரடியாக விதைகளையோ, அல்லது நாற்றுகளையோ நடலாம். இந்த வகை பைகளின் மூலம்  மண்மாற்றுவது, கிழங்கு அறுவடை செய்வது போன்றவை மிகவும் சுலபமாக இருக்கிறது.



Tuesday, December 16, 2014

அடுக்குமாடி குடியிருப்பில் மக்கியுரம், வடிகரைசல் தயாரிப்பு

அடுக்ககத்தில் மக்கியுரம் (compost), வடிகரைசல் தயாரிப்பு

மாடித்தோட்டம் குறித்து சமீப வருடங்களில் நல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது, இதன் கூடவே நகர்புரங்களில் உருவாகும் குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து மக்கும் குப்பையை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பையை மறு சுழற்சியும் செய்ய வேண்டும் என
பிரச்சாரமும் நடக்கிறது.

வீட்டில் உருவாகும் காய்கறி கழிவுகளிலிருந்து மக்கியுரம் தயாரிக்க நிறைய இடம் தேவை, நகரங்களில் எளிதில் கிடைக்காத சாணம் போன்றவை தேவை, இதனால் துர்நாற்றம் வரும், ஈக்கள் பூச்சிகள் போன்றவை வீட்டிற்க்குள் வரும் என்பது போன்ற பல சங்கடங்களால் குப்பை தரம் பிரிப்பதை தவிர்க்கிறார்கள்.

ஆனால் உண்மையில் , அடுக்குமாடி குடியிருப்பில் கூட எளிமையாக காய்கறி கழிவிகளிலிருந்து மக்கியுரம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள். ஒரே அளவுள்ள இரண்டு பிளஸ்டிக் வாளிகள் . (பெயிண்ட் வாளிகள்).


இரண்டு வாளிகளில் ஒன்றின் அடியில் நிறைய சிறு துளைஅகளைப் போட வேண்டும் துளியிடப்படாத வாளியை கீழே வைத்து, துளையிட்ட வாளியை அதன் மேலே வைக்க வெண்டும். 

மேல் வளியில் கொஞ்சம் உலர்ந்த இலைகளை இரண்டு அங்குலம் அளவுக்கு நிரப்ப வேண்டும், பின்னர் அன்றாட காய்கறிக் கழிவுகளை இட்டு வர வெண்டும், இரண்டு அங்குலம் கழிவு சேர்ந்ததும் ஒரு அங்குலம் அளவுக்கு ஈரமண் அல்லது மண்புழு கழிவு போட்டு மூடவேண்டும், பின்னர் மீன்டும் காய்கரிகழிவுகளை போடவேன்டும், இப்படியாக வாளி நிரையும் வரை கழிவுகளை இட்டு நிரப்பலாம்.



சரசரியாக இரண்டு வாரங்களில்(5லி) வாளி நிரம்பும். பூச்சி,துர்நாற்றம் போன்றவை வராமல் தடுக்க மூடியைக்கொண்டு மூடலாம்.


இந்த வாளியில் இருக்கும் கழிவு நொதித்து வரும் சுமார் 6 வாரங்களில் முழுவத்தும் மக்கி நல்ல உரமாகும். மேலும் கீழ் வாளியில் திரவ நிலையில் anaerobic waste வடிகரைசல் தேங்கும் இதனை சேகரித்து வரவேண்டும்.

.

வடிகரைசலை ஸ்ப்ரேயர் கொண்டு நேரடியாகவோ அல்லது நீரில் 1:10 என்ன்னும் விகிதத்தில் தளர்த்தியோ செடிகளுக்கு இடலாம்.

இது போன்ற முன்று செட் வாளிகளைக்கொண்டு மாற்றி மாற்றி உரம் தயாரிக்கலாம். குப்பைகளை குறைக்க உதவலாம்.

Sunday, July 03, 2011

தொட்டியில் வெள்ளிக்கிழங்கு




கடந்த ஆண்டு கடையில் வாங்கிய சர்க்கரை வெள்ளிக்கிழங்கில் ஒன்று மிகச்சிறியதாக இருந்தது, அதல் முளைபோன்ற ஒன்று தென்பட்டது. ஏற்கனவே சில முறை சேப்பங்கிழங்கை தொட்டியில் நட்டு விளைவித்திருந்ததால் , வெள்ளிக்கிழங்கை நட்டால் என்ன என்று ஒரு தொட்டியில் பதித்தேன், சில மாதங்களுக்கு பிறகு தோண்டிய போது ஒரு சிறிய தேங்காய் அளவுக்கு வளர்ந்திருந்தது.

கிழங்கை பிரித்தபின் மேலிருக்கும் இலைகளை மீண்டும் தொட்டியில் நட்டேன். சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு எடுத்து பார்த்தபோது, தொட்டி முழுமைமும் கிழங்குகளாக இருந்தது. அறுவடை செய்து சாப்பிட்டாகி விட்டது, அபார ருசி.




நானிருப்பது மூன்றாவது மாடியில் என்றாலும், எதிரே மாடியிருக்கும் பெண்ட்ஹவுஸ் போன்ற அபார்ட்மெண்ட் என்பதால், சிறிய அளவிலான தோட்டம் வைத்துள்ளேன். இதுவரை பூக்கள், கத்திரி வெண்டை, கீரை தவிர, சேப்பங்கிழங்கு, ரும்பு, கேழ்வரகு, பிரண்டை, மஞ்சள் ஆகியவைகளை விளைவித்துள்ளேன்.