Showing posts with label Popular Science. Show all posts
Showing posts with label Popular Science. Show all posts

Tuesday, September 21, 2010

கைதியின் தயக்கம் – ஆட்டக்கோட்பாடு (Game Theory)


ஒரே குற்றத்தில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளை போலிஸ் தனித்தனியே விசாரிக்கின்றது. இரண்டு கைதிகளிடமும் இந்த மூன்று தகவல்களை தருகின்றது.



1. இருவரும் குற்றத்தை ஒப்புக்கொளாமலேயே ஆளுக்கு 2 ஆண்டுகள் தண்டனை அளிக்கிககூடிய அளவுக்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன.
2. இருவரில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மற்றவரை காட்டிக்கொடுக்கும் பட்சதில், காட்டிக்கொடுக்கும் நபருக்கு ஒரு ஆண்டு தண்டனையும் மற்றவருக்கு 4 ஆண்டு தான்டனையும் கிடைக்கும்.
3. இருவருமே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் பட்சத்தில் நேரடி சாட்சியங்கள் பலமாகி இருவருக்கும் 4 ஆண்டு சிறைவாசம் கிடைக்கும்.



ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தொடர்பு கொள்ள அனுமதி கிடையாது.
இந்த சூழ்நிலையில் ஒரு கைதி எப்பேர்பட்ட முடிவை எடுப்பார்?
ஒரு கைதி அமைதிகாப்பான் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் இன்னொரு கைதியால் அமைதி காக்க இயலாது.



அறிவுப்பூர்வமாக் யோசிக்கும் பொழுது அமைதி காப்பதே நல்லது என்று தோன்றினாலும் , பெரும்பாலான சமயங்களில் பரஸ்பர நம்பிக்கையின்மை காரணமாக இருவருமே பாதிக்கப்படுவது தான் நடக்கும்.



இதுவே ஆட்டக்கோட்பாட்டில் கைதியின் தயக்கம் (Prisoner’s dilemma) என்று சொல்லப்படுகிறது.



இந்த வகையான ஆட்டக்கோட்பாட்டை இந்திய சமூக சூழ்நிலையில் பொருத்தி அதன் மூலம் இந்தியாவின் மோசமான அரசுக்கட்டமைப்பு, விதிகளை மதியாமை, பின் தங்கிய சுகாதாரம், ஒழுங்குமுறையின்மை ஆகியவற்றின் காரணிகளை நிறுவ முயல்கிறார் Games Indians Play நூலின் ஆசிரியர் வி. ரகுநாதன்.



ஒரு சில சோதனைகளின் மூலம் மற்ற வளர்ந்த நாட்டு மக்களை விட இந்தியர்களுக்கு சுயக்கட்டுப்பாடும் , சமூக ப்ரக்ஞையும், குறைவு என்பதை நிரூபித்துள்ளார்.



பொதுவாகவே இந்தியச்சூழலில் வெகுஜன அறிவியல் (Popular Science) புத்தகங்கள் குறைவு, அதுவும் பொருளாதாரம், அரசியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில் ரொம்பவுமே குறைவு. குறிப்பாக உணர்ச்சிவசப்படாத, கொள்கையை திணிக்காத எழுத்துக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்த நூல் க்ளிஷேக்களை தவிர்த்து நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளது. நமக்கு இது தான் தேவை.