Wednesday, January 10, 2007

உபி தேர்தல் முன்னோட்டம்

அஜீத் சிங் , அகில இந்திய ஆயாராம் காயாராம் அரசியலில் ஒரு முக்கிய புள்ளி, அந்தர் பல்டி அடித்து கூட்டணி மாறுவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.
தற்போது உபி தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் தன் கூட்டணி வாய்ப்புகளை திறந்து வைக்க முலாயாம் அமைச்சரவைலிருந்து தன் கட்சி அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்.விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கரும்பு விலையை அதிகரிக்கக்கோரி ராஜினாமா என்று கிச்சு கிச்சு மூட்டியுள்ளார்.
மறைந்த சரண் சிங்கின் மகன் என்ற ஒரே தகுதியுடன் இவர் அரசியல் நடத்துகிறார். வி பி சிங்க்கின் ஜனதா தளம் தொடங்கி, சந்திர சேகர் , நரசிம்ம ராவ், தேவ கவுடா, என்று பல மத்திய அமைச்சரவைகளில் அங்கம் வகித்து பதவி பெற்றார்.
பின்பு மாயாவதி , முலாயம் ஆகியோரிடம் மாறி மாறி தன் கட்சியை அடகு வைத்து அமைச்சர் பதவியை பெற்றார். இந்த தேர்தலில் முலாயம் தேருவது கடினம் என்று பரவலாக நம்பப்படுவதால் கூட்டணியிலிருந்து கழண்டுகொள்ள முதல் படியாக கரும்பு விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறார். வாழ்க.

1 comment:

Anonymous said...

Namma Ramadoss nadathura politics meriya irukuda!
Ajith singh == Ramadoss ??