Tuesday, January 16, 2007

பெரிய திருமொழி - தமிழாக்கம் (?!)

பெரிய திருமொழி உரையும் தமிழாக்கமும் என்ற நூலின் தலைப்பில் சொற்குற்றம் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு விஷயம் தான் இடிக்கிறது, திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியை தமிழில் தான் இயற்றியுள்ளார். மேற்படி நூல் 30வது சென்னை புத்தக கண்காட்சியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ஸ்டாலில் உள்ளது. அட்டையை பார்த்தால் ஏதோ தீஸீஸ் போல இருந்தது.

என்னத்த தமிழாராய்ச்சிப் பண்ணி என்னத்த...


வழக்கம் போல இந்த ஆண்டும் எந்த புத்தகம் வாங்காமல், வெறுங்கை வீசுபவர்களை நிரம்பக்காணமுடிந்தது. டெக்னிகல் புத்தகங்களை விற்கும் நிலையங்களில் கூட்டம் அலைமோதிற்று. வாஸ்து, சோதிடம், சமையல் புத்தகங்கள் இந்த ஆண்டும் வசூலில் பட்டையை கிளப்பும் என்பதென் அசைக்க முடியாத நம்பிக்கை.
புத்தக கண்காட்ச்சியைப்பற்றி என் நண்பன் தீபக் எழுதியத்தை படிக்கவும்.

1 comment:

Anonymous said...

Happy pongal bro!
and thats hilarious to see tamil translation for a book written in tamil ;)