Thursday, May 20, 2010

குருவி காப்போம்

சமீப காலமாக சிட்டுக்குருவிகள் காணாமல் போனதைப்பற்றி கவலைப்பட்டு நிறைய ஆதங்ககளை படிக்கவும் கேட்கவும் செய்கிறோம். குருவிகள் தவிர பல புள்ளினங்கள் நகர்புறப்பகுதிகளிலிருந்து விடைபெற்றுள்ளன.

நான் வசிக்கும் பெசன்ட் நகரில் இந்த பிரச்னை சற்று குறைவு தான். அன்றாடம் சிட்டுக்கிருவி, இரட்டைவால் குருவி, மைனா, மீன்கொத்தி இவைகளைப் பார்க்கிறேன் நகரின் ஒரு ஓரத்தில் இன்னும் மரங்கள் அடர்ந்து இருப்பதால் அதிக பாதிப்பில்லை போலிருக்கிறது.பறவைகள் இடம்பெயர்வதற்கு காரணம் வாகனப்புகையும் தானியங்கள் கிடைக்காததுமே தான்.

வீட்டுக்கு நான்கு வண்டி வைத்துக்கொள்ளும் அக்கப்போர்களை தவிர்த்து மரங்களை வளர்த்தால் குருவி காக்கலாம்.

******

மணிப்பூர் மக்களுக்கும் நாகாலாந்து மக்களுக்கும் திடீர் பிரச்னை வெடித்து மணிப்பூர் மாநிலம் முடங்கியுள்ளது. இந்தியாவில் மற்ற பகுதி மக்களுக்கு மணிப்புரிக்கும் நாகாவுக்கும் மொழியை வைத்தோ ஆளைவைத்தோ அடையாளம் சொல்லத்தெரியாது. இவ்வாறிருக்க உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பது போல் சண்டையிடுவது அனாவசியம்.

கூடுவாஞ்சேரியை விட சிறிய தலைநகரங்களைக்கொண்ட பகோடா போன்ற அளவேயுள்ள சிறுமாநிலங்களை வடகிழக்கில் அமைத்ததால் வந்த வினை இது. வடகிழக்கில் இருக்கிற பிரச்னை போதாதென்று போடோலேண்ட், கேரோலேண்ட் என்று புதிய மாநில கோரிக்கைகள் வேறு.

******

இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு வங்கிகளுக்குள் நடக்கும் அக்கப்போர்களை மையமாக வைத்த புதினம் If God was a Banker. இந்த கதைக்களம் இந்தியாவிற்குப் புதிது. நல்ல விறுவிறுப்பான எழுத்து நடை. தடாலடியான வட இந்தியர் நிதானமான ஒருவர் தென் இந்தியர் ஒருவர் என்று இரண்டு வங்கி நிர்வாகிகளை முக்கிய கதைமாந்தர்களாக வைத்து புனையப்பட்டுள்ளது(?) இந்த நாவல். ஆசிரியர் ரவி சுப்ரமணியம். ஆகவே முக்கியப்பாத்திரம் யார் என்று யூகிக்க அதிக நேரம் எடுக்காது.

தனியார் , பன்னாட்டு வங்கிகளின் செயல்பாடுகளைப்பற்றி கேள்விப்பட்டது எல்லாம் இந்த நாவலால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பாத்திரங்கள் ஒரு மாதிரி ஸ்டீரியோ டைப்டாக உள்ளது . வடக்கதியர்களை எதற்கு அஞ்சாத அயோக்கிய ராஸ்கல்களாகவும் தெற்கத்தியவர்களை நேர்மை சிகாமணிகளாகவும் சித்தரித்ததை தவிர்த்திருக்கலாம்.

இருந்தாலும் சில வட இந்திய எழுத்தாணிகள் நம்மவர்களை அநியாயத்திற்கு வாறுவதைப்பார்க்கையில் இதெல்லாம் ஒன்றுமேயில்லை


5 comments:

அ.முத்து பிரகாஷ் said...

பத்மா...
ரவி சுப்பிரமணியம் அவர்களின் நாவல் குறித்து அறிய தந்ததற்கு நன்றி ...
எம்புட்டு ரேட்டு சார் ...?

பத்மகிஷோர் said...

நியோ, Paperback is Rs 195.

Deepak Venkatesan said...

குருவிகள் காணாமல் போவதற்கு முக்கியமான காரணம், அவற்றின் வசிப்பிடங்கள் அழிந்துவருவது தான். இப்போதெல்லாம் நம் வீடுகளில் பரணைகள், மாடங்கள் போன்றவைகள் இருப்பதில்லை. இதனால், இவற்றில் கூடு கட்டி வாழும் புள்ளினங்களும் இடம் பெயர்ந்து வருகின்றன.
பெங்களூரில் காணாமல் போயிருந்த குருவிகள் இப்போது மீண்டும் திரும்பத் தொடங்கியிருக்கின்றன. பெட்ரோல் பங்குகளில் இன்னும் கூடு கட்டுவதற்கு ஏதுவாக மாடம் போன்ற கூரைகள் இருப்பது ஒரு காரணம். ஒரு வகையில் குருவிகள் இன்றைய நகர்புற மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப adapt செய்துகொண்டிருக்கின்றன என்று பறவையியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். In fact, மைனாக்களின் அட்டகாசம் பெங்களூரில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவை காகங்களை விட எண்ணிக்கையில் அதிகமாகி இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

பத்மகிஷோர் said...

காங்கிரீட் கட்டடங்கள் அதிகமானதால் குருவிகள் கூடு கட்டுவது கடினமாகியுள்ளது. மரங்கள் குறைந்ததும் ஒரு காரணம்.

சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் வேலையை இன்றைய நகரக்குருவிகள் செய்கின்றன எனலாம்.

இந்திய நகரங்களில் புள்ளினங்களின் மாறுதல்களை ஆராய்ந்தால் ஒரு பத்திருபது பிஎச்டி தேரும்.

கானகம் said...

சரிண்ணே.. நல்லாத்தான் இருக்கு. நீங்க பாரதியார் ஜாதியா? அவர்தான் காக்கை குருவி எங்கள் ஜாதின்னு சொன்னார்..

:-)

ஜோக்ஸ் அபார்ட், நாம் சிறுவயதில் பார்த்த பறவையினங்கள் அருகி வருவதற்கு ஆயிரம் காரனங்கள் சொன்னாலும், அவற்றைப் பாதுகாப்பது நம் கடமையல்லவா?