Tuesday, April 03, 2007

இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் என்ன வித்தியாசம்?

சின்ன வயசுல எனக்கு இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் வித்தியாசம் என்னன்னு தெரியாது, அப்பறம் ஓரளவு ஞானம் வந்ததும் புரிய ஆரம்பிச்சுது. ஆனா பாருங்க என்னுடைய புரிதல் தப்புன்னு இப்பதான் தெரிஞ்சுது. இந்த படத்த பாருங்க.







இவரோட பேரு டேவிட் கேமரூன், ப்ரிட்டிஷ் கன்ஸர்வேட்டிவ் கட்சி தலைவர், இவ்வளவு நாள் வலதுசாரியா இருந்த கட்சிய திடீர்னு இடதுசாரியா மாத்திட்டாரு, எப்படின்னு கேக்கறீங்களா, இந்த போட்டோவையும் பாருங்க.





Tuesday, February 27, 2007

டிஜிட்டல் கேமராவும் டூரிஸ்டுகளும்

டிஸ்கி 1- இந்த பதிவு படமெடுப்பத்தை நல்ல பொழுதுபோக்காக கொண்டிருப்பவர்களையோ, அல்லது படமெடுப்பதில் ஆத்ம த்ருப்தி அடைபவர்களையோ கருத்திற்கொண்டு இடப்பட்டதல்ல.

டிஸ்கி 2- தலைப்பு தமிழில் இல்லாததால் இந்த பதிவிற்கு வரிவிலக்கு கிடையாது


குழுவாக சுற்றுலாசெல்லும் போது கண்ணால் காண்பதையெல்லாம் கேமெராவில் சுடும் அன்பர்களே,

நீங்கள் வைத்திருப்பதோ டிஜிட்டல் கேமரா, படம் எடுப்பதோ கட்டடத்தை, யாராவது ஒருவர் படமெடுத்தால் போதுமே ! பிறகு படங்களை மின்மடல் மூலமாகவோ ஃபோட்டோ ஷேரிங் மூலமாகவோ பரிமாறிக்கொள்ளலாமே!

அவ்வளவு ஏன், வரலாற்று முக்கியத்துவம் அல்லது முக்கிய சுற்றுலாத்தலங்களின் படங்கள் ஏற்கனவே அனேக முறை படமேடுத்தாயிற்று, பல படங்கள் இணையத்தில் இருக்கும், ஓசியில் கிடைக்கும், கூகிளாண்டவரின் அருளுடன் அவற்றைப்பெறலாம்.

ஆகவே கட்டங்களையோ மரம் செடி கொடிகளையோ படம் எடுப்பது வேஸ்ட்!

அதனினும் வேஸ்ட் பலபேர் டிஜிட்டல் கேமராவில் அவற்றை படமெடுப்பது.

படமெடுப்பது வேஸ்டெனில் கேமரா எதற்கு? நம் கையில் கேமரா இருப்பது மனிதர்களை படமெடுக்கவே, உடன் வரும் நண்பர்களையும் அன்பர்களையும் படமெடுத்தாலே போதும் என்பது இந்தச்சிறியோனின் அபிப்பிராயம்

நம்மை நிறைய படமெடுத்துக்கொள்வதிலும் ஏகப்பட்ட தர்மசங்கடங்கள் உண்டு, குறிப்பாக மென்படங்களை எவ்வளவு பிரதிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம் எனபதாலும் , அதனை வைத்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்யலாம் என்பதாலும் சற்று கவனம் தேவை.

பொதுவாக எனக்கு அவ்வளவாக் படமெடுத்துக்கொள்வது பிடிக்காது, அதனாலேயே இந்திவிற்க்கு வெளியே பல இடங்களிலும் இந்தியாவில் சில இடங்களிலும் நிலவும் CCTV பொருத்தும் போக்கை வெறுக்கிறேன், CCTV கேமராக்களை கண்ட இடங்களில் பொருத்துவதை எதிர்த்து போராட வேண்டும்.

பாதுகாப்புக்காரணங்கள் சொல்லப்பட்டாலும் , அவை ஏற்ப்புடையவை என்றாலும் சீக்கிரமே இதற்கு மாற்று கண்டுபிடிப்பது நலம். குறைந்தபட்சம் CCTV பொருத்துவதற்கான வரன்முறைகள், எவ்வளவு நாட்கள் படங்களை வைத்திருக்கலாம், படங்களின் சேமிப்பிற்க்கு தேவையான பாதுகாப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தவேண்டும். இதனை அரசாங்கம் செய்யாமல் IEEE, ISO போன்ற தொழில்முறை குழுக்கள் வரையறுக்கலாம்.

Wednesday, February 07, 2007

சவுதாம்டனில் பிடித்த ஏழரை

வேலைக்காக வெளிநாட்டுப்பயணம் இந்த முரை ஐக்கிய ராஜ்ஜியத்தின் சவுதாம்டன் நகர். இந்தியாவிலிருந்து லன்டன் வரை ஜெட் ஏர்வேஸில் சொகுசு பயணம். லன்டனிலிருந்து டாக்ஸி.

சவுதாம்டன் வந்ததும் பிடித்தது சனி.
ஹோட்டல் அறையை முன்பதிவு செய்துவிட்டு வாடகைக்கு முன்பணம் கொடுக்க கம்பனி மறந்தால் அந்தப்பணத்தை நான் கட்டினேன். சமயம் பார்த்து கார்பரேட் கார்ட் மக்கர் செய்தது ஏடிஎம்மில் காசு எடுக்க முடியவில்லை, என் தனிப்பட்ட வங்கி கணக்கின் டெபிட் கார்ட் வேலை செய்ததால் பிழைத்தேன்.

அடுத்த நாள் கம்பனி நிர்வாகத்தை ஒரு பிடி பிடித்தபின் நிலைமை சீரடைந்தது. அடுத்த நாள் இந்தியாவிலிருந்து வரும் இன்னொரு நாபரிடம் பணம் தருவதாக சொன்னார்கள். அவர் பணத்தை பெட்டியில் வைத்து Check in செய்துவிட்டார். பெட்டியோ லன்டனில் கைக்கு வரவில்லை. அவருக்கும் சேர்த்து வடகையை செலுத்த வேண்டிய நிலைமை வந்தது. ஒருவழியாக 36 மணி நேரத்திற்க்குப்பின் பெட்டி கைக்கு வந்தது. கார்பரேட் கார்டும் வேலை செய்தது. சுபம்.

அலுவல் ரீதியாக குறைந்த காலத்திற்கு வெளிநாடு செல்பவர்கள் கம்பனி தரும் அந்நிய செலாவணி தவிர கொஞ்சமாவது சொந்தமாக அந்நிய செலாவணியைத் (கரன்ஸியாக) வாங்கிக்கொள்ளவும் . எங்கும் அலையவேண்டியது இல்லை. ஏர்போட்டிலேயே கிடைக்கும்.
சொந்தப்பெயரில் சர்வதேச கிரெடிட் (அதிக அளவு லிமிட்டுடன்) மற்றும் டெபிட் கார்டுகளை எடுத்துச்செல்லவும்.ஹோட்டல் வாடகை மற்றும் டாக்ஸிக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும். இல்லை அதற்க்கும் சேர்த்து அட்வான்ஸ் வாங்கவும். குறிப்பாக பணத்தை பெட்டியில் வைக்காதீர்கள். கொஞ்சம் லோ டெக் காக தெரிந்தாலும் பணத்தை கரன்ஸியாகவோ, ட்ராவல்லெர்ஸ் செக்காகவோ எடுத்துச்செல்லவும். ஏனென்றால் ட்ராவல் கார்ட் போன்ற அஃறிணைப்பொருட்கள் சமயம் பார்த்து கழுத்தறுக்ககூடியவை என்பதை அனுபவதில் கண்டேன்.

Tuesday, January 16, 2007

பெரிய திருமொழி - தமிழாக்கம் (?!)

பெரிய திருமொழி உரையும் தமிழாக்கமும் என்ற நூலின் தலைப்பில் சொற்குற்றம் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு விஷயம் தான் இடிக்கிறது, திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியை தமிழில் தான் இயற்றியுள்ளார். மேற்படி நூல் 30வது சென்னை புத்தக கண்காட்சியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ஸ்டாலில் உள்ளது. அட்டையை பார்த்தால் ஏதோ தீஸீஸ் போல இருந்தது.

என்னத்த தமிழாராய்ச்சிப் பண்ணி என்னத்த...


வழக்கம் போல இந்த ஆண்டும் எந்த புத்தகம் வாங்காமல், வெறுங்கை வீசுபவர்களை நிரம்பக்காணமுடிந்தது. டெக்னிகல் புத்தகங்களை விற்கும் நிலையங்களில் கூட்டம் அலைமோதிற்று. வாஸ்து, சோதிடம், சமையல் புத்தகங்கள் இந்த ஆண்டும் வசூலில் பட்டையை கிளப்பும் என்பதென் அசைக்க முடியாத நம்பிக்கை.
புத்தக கண்காட்ச்சியைப்பற்றி என் நண்பன் தீபக் எழுதியத்தை படிக்கவும்.

Wednesday, January 10, 2007

உபி தேர்தல் முன்னோட்டம்

அஜீத் சிங் , அகில இந்திய ஆயாராம் காயாராம் அரசியலில் ஒரு முக்கிய புள்ளி, அந்தர் பல்டி அடித்து கூட்டணி மாறுவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.
தற்போது உபி தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் தன் கூட்டணி வாய்ப்புகளை திறந்து வைக்க முலாயாம் அமைச்சரவைலிருந்து தன் கட்சி அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்.விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கரும்பு விலையை அதிகரிக்கக்கோரி ராஜினாமா என்று கிச்சு கிச்சு மூட்டியுள்ளார்.
மறைந்த சரண் சிங்கின் மகன் என்ற ஒரே தகுதியுடன் இவர் அரசியல் நடத்துகிறார். வி பி சிங்க்கின் ஜனதா தளம் தொடங்கி, சந்திர சேகர் , நரசிம்ம ராவ், தேவ கவுடா, என்று பல மத்திய அமைச்சரவைகளில் அங்கம் வகித்து பதவி பெற்றார்.
பின்பு மாயாவதி , முலாயம் ஆகியோரிடம் மாறி மாறி தன் கட்சியை அடகு வைத்து அமைச்சர் பதவியை பெற்றார். இந்த தேர்தலில் முலாயம் தேருவது கடினம் என்று பரவலாக நம்பப்படுவதால் கூட்டணியிலிருந்து கழண்டுகொள்ள முதல் படியாக கரும்பு விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறார். வாழ்க.