Tuesday, October 31, 2006

கார்காலத்தில் கார் ஓட்டுவது

சென்னை மழையை பற்றி தீபக் எழுதிய பதிவை பார்த்ததும் இதை எழுத தோன்றியது. மழை பெய்தால் சென்னையில் என்னை போன்ற கார் ஓட்டிகளுக்கு ஜாலி . பைக் ஆசாமிகள் குறுக்கே வரமாட்டார்கள் , நிம்மதியாக வண்டி ஓட்டலாம். மழை இல்லத போது என்ன தான் நாம் சொகுசு வண்டியில் குளு குளு என்று போனாலும் , பொசுக் பொசுக் என்று சந்தில் புகுந்து விர்ரென பறக்கும் பைக்குகளை பார்த்தால் கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை ஏற்ப்படும் . மழையில் பைக்காரர்கள் வண்டியை ஓரம்கட்டி பெட்டிகடை, பஸ்ஸ்டாப் என்று ஒதுங்குவதை சாடிச புன்னகையுடன் பார்த்துக்கொண்டு தண்ணீரை இருபக்கமும் வாரித்தெளித்தப்படி போகும் போது கிடைக்கும் திருப்தியே தனி தான். இதெல்லாம் மழை விடும் வரை தான், மழை விட்டவுடனே ஓரம்கட்டிய எல்லா பைக்குகளும் ரோட்டில் ஆஜர் ஆகி கர் புர் என்று சத்தம் போட்டபடி ட்ராபிக் ஜாம் ஆக்குவார்கள். கார் ஓட்டிகள் மழை பலமாக அடித்துக்கோண்டிருக்கும் போது கிளம்பிவிடவேண்டும் , சீக்கிரம் போய்விடலம். மழை விட்டுதோ போச்சு . பயணம் நாஸ்தி தான்.

2 comments:

Nirek said...

aha...i never heard abt this part of the enjoyments of car owners!
good!

Deepak said...

ஆமாம். சந்த்ரு சாரும் சொல்லி இருக்கிறார்.