Thursday, October 12, 2006

ந்யூமெராலஜி என் அனுபவம்

ந்யூமெராலஜியை பற்றிய முந்தய பதிவில் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். இந்தப்பதிவு சோதிடப்பித்து மக்களை எப்படி பிடித்துக்கொண்டு ஆட்டுவிக்கிறது என்பதை பற்றிய என் சொந்த அனுபவம்.
நான் +2 படித்த போது, எங்கள் பள்ளியில் ஒரு அறிவியல் கண்காட்ச்சியை நடந்தது, நானும் என் நண்பன் பாஸ்கரும் கொஞ்சம் கணிணி ஆர்வம் கொண்டத்வர்கள் அதனால் கணிணி அறிவியல் ஆசிரியை திருமதி கவுரி அவர்கள் எங்களை ஏதாவது ஒரு திட்டத்தை செய்யச்சொன்னார்கள்.
நாங்கள் சில நாட்கள் யோசித்து விட்டு ஒரு ந்யூமெராலஜி செயலியை செய்ய முடிவு செய்தோம்.

ஒரு "எண் கணித மேதை" எழுதிய புத்தகம் கிடைத்தது. அதை வைத்து பெயர், பிறந்த நாள் இத்யாதிகளைகொடுத்தால் பலன்களைச்சொல்லும் வகையில் ஒரு நிரலை உருவாக்கினோம்.
ஆப்போதய (1996) கம்ப்யூட்டர்களில் GUI கூட கிடையாது, நாங்கள் ஒரு Monochrome Monitor உதவி கொண்டு BASIC மொழியில் ஒரு நிரல் எழுதினோம்.

செயலி நன்றாக வேலை செய்தது. மற்ற மாணவர்கள் சில நல்ல செயலிகளை செய்திருந்தார்கள் . இந்தியாவின் அனைத்து ஊர்களை பற்றிய குறிப்புகளை வரைபடத்துடன் காட்டும் ஒரு நிரல், அறிவியல் தகவல்கள் பற்றிய ஒரு நிரல் என்று பல இருந்தன.
கண்காட்சி அன்று , மாணவர் , பெற்றோர், ஆசிரியர்களென அனைவரும் என் செயலி முன் அமர்ந்து சோதிடம் பார்த்தார்கள். மற்ற மாணவர்கள் கணிணி முன் அமர்ந்து ஈ ஓட்டினார்கள்.
பாஸ்கர் வேரு ஒரு திட்டதிலும் பங்கு பெற்றதால் அந்த வேலையை கவனிக்கச்சென்றுவிட்டான்.

நான் தனியாளக அனைவருக்கும் சோதிடம் பார்க்க வேண்டியதாயிற்று. எனக்கு பெருமிதமும், கடுப்பும் சேர்ந்து வந்தது. இரு நாட்களுக்குப்பிறகு ஒருவழியாக கண்காட்சி முடிந்தது. ஆனால் இன்று வரை மக்களின் சோதிடப்பித்தை பற்றி நினைத்து வருந்துகிறேன்.

1 comment:

Nirek said...

yep, that shows the people's addiction for astrology yaar!
noone believe in themself after some age! :( sad!