Friday, November 16, 2007

கர்நாடகம் காட்டும் வழி!!

கர்நாடகா மாநிலத்தில் 2004 ல் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, பாஜக முதலிடத்திலும் காங்கிரஸ் இரண்டாவதாகவும் தேவகவுடாவின் ஜத(எஸ்) மூண்றாவதகவும் வந்தன.

ஏதேனும் இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலை. முதல் இருபது மாதங்கள் , காங்கிரஸின் தரம் சிங் முதல்வராக இருந்தார், அவரை கவிழ்த்து பின்னர் குமாரசாமி ஜதவின் சார்பில் ஆட்சியை பிடித்தார்.

இப்போது பா.ஜ வின் எடியூரப்பா விடம் ஆட்சி வந்துள்ளது.

ஆக ஒரே சட்ட சபையை வைத்துக்கொண்டு 20 மாத காங்கிரஸ் ஆட்சி, 20 மாத ஜத(எஸ்) ஆட்சி, 20 மாத பா.ஜ ஆட்சி என்று சரிசமமாக ஆட்சி பகிரப்பட்டுள்ளது.

மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட்டுள்ளது.

இதில் மற்றொரு நன்மையும் உள்ளது. வெறும் 20 மாதங்களே ஆட்சி நடப்பதால் எந்த ஒரு தொலைனோக்குத் திட்டதையும் செயல் படுத்தமுடியாது. இதன்மூலம் பல சீரழிவுகள் தடுக்கப்படும்.


28% ஓட்டு வாங்கி விட்டு ஒரே கட்சி 5 ஆண்டுகள் குப்பை கொட்டுவதை விட இது தேவலை.


நம்முடைய தேர்தல் முறை வாங்கும் ஓட்டின் அளவிற்கேற்ப ஆட்சியை பகிர்ந்துகொள்ளும் விகிதாச்சார முறையில் இல்லை என்றாலும் , கர்நாடகத்தில் நடந்த இந்த அரசியல் விபத்தின் மூலம் எதிர்காலத்தில், பாராளுமன்ற முறையிலேயே விகிதாச்சார முறையையும் உள்வைத்து விடமுடியும் என்று புலனாகிறது.

இதனை வெளிக்கொணர்ந்த கர்நாடக அரசியல் மேதை தேவேகவுடருக்கு என் நன்றிகள்.

-----
இப்படி எழுதிய 48 மணி நேரத்தில் ஆட்சி கவிழ்ந்து விட்டது. என் கணிப்பை பொய்யாக்கிய கர்நாடக அரசியல் மேதை தேவேகவுடருக்கு நன்றி.

2 comments:

கானகம் said...

//மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட்டுள்ளது//

மிதிக்கப்பட்டுள்ளது.

//இதில் மற்றொரு நன்மையும் உள்ளது. வெறும் 20 மாதங்களே ஆட்சி நடப்பதால் எந்த ஒரு தொலைனோக்குத் திட்டதையும் செயல் படுத்தமுடியாது. இதன்மூலம் பல சீரழிவுகள் தடுக்கப்படும்.

உண்மை. ஆனால் அந்த முயற்சியில் மன்னள்ளிப்போடப்பட்டுள்ளது.

இதெல்லாம் இந்தியாவின் வியாதிகள்..எப்போதும் தீராது..

நல்ல காலம் பிறக்க பிரார்த்திப்போம்..

கானகம் said...

Padmakishore...

What happenned?? No scribblings now a days???

JK