Monday, November 27, 2006

In Spite of the gods - புத்தக விமர்சனம்



இதை எழுதிய Edward Luce, 5- 6 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் ஒரு ஆங்கில நிருபர் (Financial Times)

அரசு அதிகாரிகள், சாதி மத அரசியல், குடும்ப அரசியல், காலம்தாழ்த்திக் கழுத்தறுக்கும் நீதிமன்றங்கள், ஊழல், உள்கட்டமைப்பு குறைபாடு, வறுமை, படிப்பறிவின்மை போன்றவற்றை எல்லாம் மீறி இந்தியா எப்படி வளருகிறது என்பதனை பற்றிய புத்தகம்.

நகரங்களுக்கு பெருமளவு குடிபெயர்ந்தாலும் இந்தியர்களுக்கு கிராமங்கள் மீது இருக்கும் தணியாத காதலையும். நகரங்களில் இடக்கரடக்கலாக தொடரும் சாதி அமைப்பையும். புதிய தலைமுறை பணக்காரர்கள் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பணத்தை வாரி இரைப்பதையும் இவற்றுக்கு நடுவே கோர முகம் காட்டும் வறுமையையும் பெண்சிசுக்கொலைகளையும் , எய்ட்ஸ் தாக்குதலையும் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

நாட்டில், அர்த்தமற்ற பல வணிக கட்டுப்பாடுகளையும் வரிகளையும், ஊழல் செய்ய ஒரு வாய்ய்பாக கருதி , அதிகாரிகள் தளர்தாமல் விட்டு வைத்திருப்பதையும், அதனால் ஏற்படும் தொழில் வளர்ச்சி பாதிப்பையும் உதாரணங்களுடன் அழகாக குறிப்பிடுகிறார்.
இந்திய கோர்ட்களில் நடக்கும் வழக்குகளால் முடங்கியிருக்கும் சொத்து சுமார் 35,000 கோடியாம்.

அரசியலைப் பொறுத்தவரை இந்திய அரசியல்களத்தை காங்கிரஸ் , பாஜக, மற்றும் பிராந்தியக்கட்சிகள் என்று பிரித்து அலசி கூறப்பட்டுள்ளது. இடதுசாரிகளை பற்றி அவ்வளவாக இல்லை.

இந்திய முஸ்லிம்களின் பிரச்சனைகளை காஷ்மீருடன் சம்பத்தப்படுத்தி சொதப்பிவிட்டார். ஆனால் முஸ்லிம்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளை ஓரளவு எழுதியிருக்கிறார்.

சில factual errors, உதாரணம், வைசியர்களை நாடாளும் சாதி என்று குறிப்பிட்டு 3- 4 முறை தவறாக வந்துள்ளது. இறுதி அத்தியாயத்தில், இந்திய அரசு என்ன செய்ய வேண்டும், காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும், பாஜக என்ன செய்ய வேண்டும், என்று ஏகத்துக்கும் அட்வைஸ் மழை. இதை தவிர்த்திருக்கலாம். நாட்டின் இன்னொரு பிரச்சனையான தீவிரவாதத்தைப் பற்றியும் பெரிதாக ஒன்றும் எழுதப்படவில்லை.

தற்கால இந்தியாவை பற்றி ஒரு நல்ல புத்தகம். படிக்கலாம்.

டிஸ்கி. ஜெயலலிதாவை புகழ்ந்து சில வரிகள் வருவதால் திராவிட அன்பர்கள் இதை தவிர்ப்பது நலம்.

2 comments:

Nirek said...

Good review
Has he wrote abt jaya in that....bad da!

பத்மகிஷோர் said...

ஜெயலலிதாவை சிறப்பான சுனாமி நிவாரணதிற்காக பாராட்டியிருக்கிறார். நிர்வாகத்தையும் பாராட்டியிருக்கிறார்.